சிவாநுபூதியிலேயே திளைத்திருந்த ஞானப்பிரகாசர்,
அருள்நிலை கைவரும் பக்குவத்திலிருந்த ஞானசம்பந்தரை
'நிற்க' எனக் கட்டளையிட்டு உட்சென்றார். ஆசாரியர்
பெற்ற சிவாநுபூதியை ஞானசம்பந்தரும் கைவரப் பெற்றவராய்
மாளிகை வாயிலில் கைவிளக்கு ஏந்தியவராகவே
நின்றார். ஞானசம்பந்தரின் பெருமையை ஞாலம் அறியச்செய்து
அதன்மூலம் சைவப் பயிர் தழைக்க இறைவன் திருவுளம் பற்றினான் போலும். அன்றிரவு பெருமழை பெய்தது.
சிவாநுபூதியில் திளைத்திருந்த ஞானசம்பந்தர்
மீது ஒருதுளி மழை கூடப்படவில்லை. விளக்கோ அணையாது
சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது.
குருஞானசம்பந்தராயினார் :
வைகறைப் பொழுதில் ஞானப்பிரகாசரின்
பத்தினியார் சாணம் தெளிக்க வருங்கால், ஞானசம்பந்தர்
அநுபூதி நிலையில் நிற்பதையும், விளக்கு
சுடர்விட்டுப் பிரகாசிப்பதையும் கண்டு உட்சென்று
பதியிடம் வியப்புடன் அதனை வெளியிட்டார்.
ஞானப் பிரகாசர் விரைந்து வந்து
பார்த்து, ஞானசம்பந்தரிடம் திருவருள் பெருகுகின்ற
நிலையைக் கண்டு மகிழ்ந்து "ஞானசம்பந்தா! நீ
ஆசாரியனாக இருந்து, பக்குவம் உடையவர்களுக்கு
ஞானோபதேசம் செய்து ஆசாரியனாக
விளங்குவாயாக" என்று அருளினார். அப்பொழுது ஞானசம்பந்தர்,
|