| வாழ்த்து வையம் நீடுக மாமழை மன்னுகமெய் விரும்பிய அன்பர் விளங்குக
 சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
 தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
 -பெரிய புராணம். வான்முகில் வழாது பெய்கமலிவளம் சுரக்க மன்னன்
 கோன்முறை அரசு செய்க
 குறைவிலாது உயிர்கள் வாழ்க
 நான்மறை அறங்கள் ஓங்க
 நற்றவம் வேள்வி மல்க
 மேன்மைகொள் சைவ நீதி
 விளங்குக உலக மெல்லாம்.
 -கந்தபுராணம். மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
 நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
 புல்குக உலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.
 - திருவிளையாடற் புராணம். திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதிசேரும்நின்றன்
 மருவார் மரபும் திருநீறும் கண்டியும்
 வாழ்கஅருட்
 குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற்
 கோநிரைகள்
 தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த
 தேசிகனே.
 - ஆதீன அருள் நூல். |