முருகா
முன்னுரை

    
     முருகப் பெருமானுடைய திருவருள் முழுவதும் பெற்ற முனீந்திரர் அருணகிரிநாத
சுவாமிகள். இந்த ஞானாசாரியர் உலகம் உய்யப் பாடிய அற்புத ஞானத் தமிழ் திருப்புகழ்.

     இந்த ஐந்தாம்படைவீட்டுத் திருப்புகழின் பிற் பகுதியும் 6-ஆம் படைவீட்டுத்
திருப்புகழும் உரையுடன் இப்போது வெளிவருகின்றது.

     பலகாலமாக உயர்ந்த தமிழ் நூல்களை அச்சிட்டு, செந்தமிழுக்குத் தொண்டு செய்யும்
சென்னை வானதி பதிப்பகம் உயர்திரு. ஏ. திருநாவுக்கரசு அவர்கள் இந்த ஐந்தாம்படை
வீட்டின் பிற்பகுதியையும் 6-ஆம் படை வீட்டுத் திருப்புகழ் உரையையும் அச்சிட்டு
அன்பர்கட்கு வழங்குகின்றார்.

     இது மிகச் சிறந்த நற்பணியாகும். இதனை அன்பர்கள் ஓதி உய்வு பெறுக.
 

 

அன்பர்.,
கிருபானந்தவாரி