ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் திருவடிக்
கமலங்களே என் வாழ்வுக்குக் கலங்கரை விளக்கம். அவ்விளக்கத்தின்
ஒளியில் மேன்மேலும் விளக்கம் பெறத் திசைநோக்கிப் பணிகின்றேன்.
தொண்டு செய்யும் மன உணர்வில் எழுதி வெளியிடப் பெறும்
இந்நூலை அன்பர்கள் விரும்பிப் போற்றித் தல யாத்திரை செய்து அருள்
நலம்பெறவேண்டி, திருக்காமக்கோட்டி உடனாகிய திருவேகம்பப் பெருமான்
திருவருள் எல்லோர்க்கும் துணை நிற்கப் பிரார்த்திக்கின்றேன்.
என்றும் இறை பணியில்,
பு.மா.ஜயசெந்தில்நாதன்
|