என்று கூறுவது போல்
கொங்குநாட்டினைப் பல்வேறு நிலைகளில் படம்
பிடித்துக் காட்டுகின்றன இக்கொங்கு மண்டல சதகநூல்கள்.
செய்திகள்
நாட்டின்
எல்லைகள், நாடுகள், மலைகள், ஆறுகள், தலங்கள் என
நிலவியல் நிலையில் கொங்குநாட்டின் அத்துணைச் செய்திகளையும்
இந்நூல்கள் தொகுத்துத் தந்துள்ளன. காவிரியின் உற்பத்தியிலிருந்து
தொடங்கி, இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் குறித்தும், அந்நாட்டில்
வாழ்ந்த புலவர்கள் புரவலர்கள் குறித்தும் அரியபல செய்திகள்
காணக்கிடக்கின்றன.
நூல்கள்
உரையாசிரியர்கள்
சதகப் பாடல்களை விளக்குதற்காகக் காட்டப்பெற்ற
நூல்களுள் பல கொங்குநாட்டுச் சிற்றிலக்கியங்களாக விளங்குகின்றன.
அவற்றுள் இன்னும் பல பதிப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளமை பெரிதும்
குறிப்பிடத்தக்கதாகும். அந்நூல்கள் வருமாறு:
அசதிக்
கோவை |
திருச்செங்கோட்டுக்
குறவஞ்சி |
அத்துவிதவெண்பா
|
திருவெஞ்சமாக்
கூடற்புராணம் |
அப்பிரமேய
தலபுராணம் |
நந்த
மண்டல சதகம் |
அமுதாம்பிகை
பிள்ளைத்தமிழ் |
நல்லதம்பி
சர்க்கரைக் காதல் |
அவிநாசித்
தலபுராணம் |
பசும்பையெழுபது
|
ஒருதுறைக்
கோவை |
பவானித்
தலபுராணம் |
கரபுநாதர்
புராணம் |
பாம்பண
கவுண்டன் குறவஞ்சி |
கரூர்ப்புராணம்
|
புகழ்ச்சோழர்
புராணம் |
காணிநூல் |
புலிப்பாணிபாடல்
|
கீசகன்
கதை |
பூந்துறை
அவிநாசிக் |
கொல்லிமலை
அகராதி |
கவுண்டன்
வண்டுவிடு தூது |
சண்டிகாதேவி
விசயதசமிப் |
பேரூர்ப்புராணம்
|
பாடல்
|
மேழிவிளக்கம்
|
சிவமலைக்
குறவஞ்சி |
மோகினி
விலாசம் |
இந்நூல்கள் அனைத்தையும்
தொகுத்து ஆராய்ந்தால் அண்மைக் கால
வரலாற்றில் பல புதிய சிந்தனைகளும் கிடைக்கக் கூடும்.
|