உ
சிவமயம்
கொங்கு
மண்டல சதக உரையாசிரியர் இயற்றியன
விநாயகர்
காப்பு
கலிவிருத்தம்
பொற்பு
நீடு புரிசடை யத்தனார்
கற்பு நீடு கனிமணந் தீன்றவோர்
வெற்பு நீடு மிளிர்களிற் றின்சரன்
அற்பு நீடு மகத்து ணிறுத்துவாம். |
அர்த்த
நாரீச்சுரர் துதி
அறுசீரடியாசிரிய
விருத்தம்
எல்லாப்
பொருளுந் தானாகி
யெதினும்
பொருந்தா திசைக்குமறைச்
சொல்லாய்ப் பொருளாய்ச் சொலாநிலையாய்த்
துரிசற்
றவர்த மனத்தினன்றி
நில்லாப் பிழம்பா யிருசாய
னிலவி
யமுதி னொருவடிவாய்
நல்லா ளிடத்து விளங்குமர்த்த
நாரிப்பரனை
வணங்குவமால். |
சுப்பிரமணியர்
துதி
வேறு
ஒழுக்கமே
விழுப்ப மேலா முணர்ச்சியு மில்லாப் பொல்லாப்
புழுத்தன யனைய ரேனும் புண்ணியா முருகா வென்று
வழுத்துவோர் துயர மேக வான்மழை பொழிதன் மான
பழுத்தநல் வரத்தை யூற்றும் பணிகிரி குகனை யுள்வாம். |
|