அரவிந்தத்
தடத்துதித்து மதின்வசித்து மதனி
னலர்ந்தமலர்த் தேன்சுவைசற் றறியாத்த வளைபோற்
பரவிந்தக்
கொங்குமண் டலத்துதித்தும் வசித்தும்
பழகுவனா யினுமதன்றன் பழஞ்சரித மோரேன்
திருவிந்தை
யிலகுமிம்மண் டலசதகத் தினுக்கோர்
சிற்றுரையு மேற்கோளுந் தேர்ந்தவர லாறுந்
தரவந்த
வென்றுணிவுக் கியாவர்களே யிகழ்வார்
தன்னூரி னபிமானந் தணந்தவரு மிலரே.
|