'முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட
முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்'
|
என்னும் தாழிசையில் உணர்த்துகின்றார் ஆசிரியர். ஈண்டுக்
குலோத்துங்கன், வெள்ளாறு, கோட்டாறு என்னுமிடங்களைச் சார்ந்த
காட்டரண்களைக் கொளுத்தியழித்தானென்றும் குறிக்கப்படுமாறு காண்க.
இவன் சேரரையும்
வென்றி கொண்ட தன்மையை,
'போரின் மேல்தண்டெ டுக்கப்பு றக்கிடும்
சேரர் வார்த்தை செவிப்பட்டதில்லையோ'
|
என்றவிடத்து உணர்த்தினார் ஆசிரியர்.
இவன் சேரனை வென்றிகொண்டு, திருவனந்தபுரத்திற்குத் தெற்கேயுள்ள
விழிஞம், காந்தளூர்ச்சாலை என்னும் சேரர் துறைமுகங்களில்
இருந்த
மரக்கலங்களைச் சிதைத்தழித்தனன். இச்செய்தியை,
'வேலை கொண்டுவி ழிஞம ழித்ததும்
சாலை கொண்டதும் தண்டுகொண் டேஅன்றோ'
|
என்றவிடத்து உணர்த்தினார் ஆசிரியர்.
இங்ஙனம் வடநாடும் தென்னாடும் வென்றிகொண்டு பேரரசனாய்த்
திகழ்ந்திருந்தனன் இவன் என்பதை,
'பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே
கங்கை மணாளனை வாழ்த்தினவே'
|
என, ஆசிரியர் குறிக்குமாற்றால் உணர்க.
|