|  
  தேவகி வயிற்றிற் பிறக்கும் ஆண் மகவு உன்னைக் கொல்லும் என்று கணிதர்  
கூறிய நாள் முதல் தேவகியையும் அவள் கணவனாகிய வாசுதேவனையும் சிறை  
வைத்துப் பிறந்த மகவனைத்தையுங் கொன்றவன்; நந்தகோபன் மனையில்  
வளர்கின்றான். அவனே தன்னைக் கொல்வானென்றறிந்து பல சூழ்ச்சியாற் கொல்ல  
முயன்றவன்; கண்ணனாற் கொல்லப்பட்டவன். தந்தையையுஞ் சிறை வைத்த  
கொடியவன். (92. 253, 686) 
 கண்ணன்:- வாசுதேவனுக்கும் தேவகிக்கும் மைந்தனாகப் பிறந்தவன்; 
  
நந்தகோபனுக்கும் அசோதைக்கும் வளர்ப்புப் புதல்வனாக வந்தவன்; சாந்தீப  
முனிவன்பாற் கல்வி கற்றவன்; குசேலனுடன் ஒருங்கு கற்றவன்; வடமதுரையிலும்  
துவாரகையிலும் அரசு புரிந்தவன்; கஞ்சனால் விடுத்த சகடாசுரன், பூதனை  
முதவியவர்களைக் கொன்று முடிவிற் கஞ்சனையுங் கொன்றவன்; பாண்டவர்க்குப்  
படைத் துணையாகிப் பார்த்தன் தேர்ப்பாகனாயமர்ந்து பல சூழ்ச்சி புரிந்து பாரதப்  
போரை முடித்தவன்; திருமால் பிறப்பில் ஒன்பதாம் பிறப்பாகக் கண்ணனைக்  
கூறுவர். 2(பா) 
 கரன்:- விச்சிரவா என்பவனுக்குச் சாகை என்பவளிடம் 
 பிறந்தவன்; இவனுடன்  
பிறந்தவர்கள் தூடணன். திரிசிரா என்பவர்; இவர் மூவரும் சூர்ப்பணகையழைக்க  
வந்து இராமன் இலக்குவனோடு போர் புரிந்து படைகளும் தாமும் அழிந்தனர். (671) 
 கவந்தன்:- இவன் ஒரு கந்தருவன்; தூலகேசன் என்ற முனிவன் 
 சாபத்தால்  
அரக்கனாயினன்; இந்திரனோடெதிர்த்துப் போர் புரிந்தபோது அவன் வச்சிராயுதத்தை  
யேவ அப்படை அவனுடைய தலையையும் காலையும் மோதி வயிற்றிற்  
புதையுமாறு செய்ய அதனாற் கவந்தன் என்ற பெயர் பெற்றவன்; இராமனும்  
இலக்குவனும் சீதையைத் தேடி வரும்போது அவர்களைப் பிடித்து விழுங்க முயன்று  
அவர்களாற் கொல்லப்பட்டவன். பின் சாப நீங்கி இராமனைத் துதித்துப் பழைய  
கந்தருவனாகிச் சென்றவன் (672) 
 கவுரி;-உருக்குமணியால் வணங்கப்பட்ட காளியின் பெயர். 
 இவள் வரம்பெற்று  
உருக்குமணி கண்ணனை மணந்தாள். (692) 
 காசிபன்;-இவன் ஒரு முனிவன்; அதிதி, திதி என்ற இருமங்கையர்க்கும் 
  
கணவன்: அதிதி வயிற்றில் முப்பத்து முக்கோடி தேவர்களையும், திதி வயிற்றில்  
அறுபத்தாறு கோடி அசுரர்களையும் பிறப்பித்தவன்.(666) 
 காலயவனன்:-கண்ணன் பகைவர்களில் ஒருவன்; இவன் வடமதுரையைப் 
  
படையுடன் முற்றுகையிட வருவதை நாரதர் கூறக் கேட்ட அஞ்சியோடுபவன் போல்  
ஓடி மலைக்குகைக்
  
   
  |