13. பாம்பாட்டி, 14. இடைக்காட்டுச்
சித்தர், 15. கௌசிகர், 16. வசிட்டர், 17.
பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர்,
22. நந்தீசர், 23, அகப்பேய், 24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத
நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31.
காகபுசுண்டர், 32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர்,
36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர்
(அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர்,
ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.
இப்படி சித்தர்கள்
பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே
செல்கிறது. ஆயினும் பதினெட்டுப் புராணங்கள், பதினெட்டுப் படிகள்,
பதினெண் குடிமை, பதினெண் பாஷை என்று வரையறை செய்தது போல்
சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப்
புலவர்கள் செய்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்
கீழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண்
சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர்.
ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.
இந்தப் பதினெண் சித்தர் பாடல் தொகுதியினுள் அகப்பேய், அழுகணி,
கடுவெளி, குதம்பை, பாம்பாட்டி, சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார்,
காகபுசுண்டர், ஞானசித்தர், கந்துளிச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், இடைக்
காட்டுச் சித்தர், புண்ணாக்குச் சித்தர், குதம்பைச் சித்தர், விளையாட்டுச்
சித்தர், ஆகிய பாடல்கள் தொகுக்கப்பட்டு உங்கள்முன் அறிமுகமாகின்றன.
|