என நிறங்களையும்,
பூவன் மொந்தன் ரஸ்தாளி
பேயன் நேந்திரம் மலைவாழை...
எனப் பழவகைகளையும்,
சம்பத்துக்கு வீடு உண்டு
தாம்ப ரத்திலே
பட்டுவுக்கு வீடு உண்டு
பல்லா வரத்திலேஎனச் சென்னை நகரப் பகுதிகளையும்,
கங்கை சிந்து பிரம்ம புத்ரா
பிறக்கும் இமயமாம் என இமயத்தையும் அதில் தோன்றும் நதிகளையும் பாட்டுப் போக்கிலேயே
குழந்தைகள் நெஞ்சில்
பதியவைத்து விடுகிறார்;
கூட்டம் கூட்ட மாகவே
குருவி பறந்து சென்றிடும் எனத் தொடங்கும் பாடலில் கற்கள் குவியல் குவியலாகக் கிடக்கும்; பழங்கள்
கூறு கூறாய்
விற்கும்; திராட்சைகள் குலை குலையாய்த் தொங்கும் என
அடுக்குத் தொடர்களை அழகுறக் கற்பிக்கிறார். ஒலி நய உத்தியர்
பொருளுக்கு முக்கிய இடமின்றி ஓசை நயத்தை மட்டுமே
கருத்திற்கொண்டு குழந்தைப் பாடல்கள்
இயற்றப்படுவதுண்டு. அவை
பொருளி
|