முகப்பு
 
தொடக்கம்

மூதறிஞர் செம்மல்
வ.சுப. மாணிக்கனார்
1917-1989

பிறப்பு : 17.4.1917 (புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரி)
 
பெற்றோர் :  வ.சுப்பையா - தெய்வானைஆச்சி
 
கல்வி :  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்வான்’ படிப்பு,
முதல்வகுப்பு தேர்ச்சி (1940) பி.ஓ.எல் - 1945; எம்.ஓ.எல்- 1948;
எம்.ஏ- 1951; பி.எச்.டி-1957
 
பணி :  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘விரிவுரையாளர்’ ஏழு
ஆண்டுகள் (1941-1948), காரைக்குடி அழகப்பா கல்லூரியில்
தமிழ்ப் பேராசிரியர் (1948-1964)
 
முதல்வர்  : அழகப்பா கல்லூரியில் ஆறு ஆண்டுகள் முதல்வர் (1964-70
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர்
(1970-1977).
அங்கு ஏழு ஆண்டுகள் புல முதன்மையர்.
 
துணை   
வேந்தர்
 : மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 17-8-1979-    
 30-6-1982 பண்டிதமணி கதிரேசனார் நூற்றாண்டு விழாவைச்
சிறப்பாகக் கொண்டாடியமை.
 
பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய துறைகள் :
 
    1979 : எரியந்துறை ; 1980: மேலாண்மைக் கல்வி ;
1981 : பதிப்புத்துறை-மொழியியல்துறை;
1982 : தமிழியற்புலம்
 
எழுத்துப் பணி மனைவியின் உரிமை - முதல்நூல் - 1947
வள்ளுவம் - 1953; தமிழ்க்காதல் - 1957;
கம்பர் 1965-தமிழக அரசு முதற்பரிசு பெற்றது
மாணிக்கக் குறள் - 1989
            

தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக்குழுத் தலைவர் - 1981

புலவர் குழுத் தலைவர் : (1974-1989)

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர்

தமிழ்வழிக் கல்விஇயக்கம் : 1988


முன்பக்கம்
அடுத்த பக்கம்