எண்ணுறும் போது தமிழையே யெண்ணீர்;
   இசைத்துழி தமிழையே யிசைப்பீர்;
பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
   பழுதறப் பண்ணியின் புறுவீர்;
உண்ணுறும் போதும் உறங்கிடும் போதும்,
   உயிருளந் துடித்திடும் போதும்,
கண்ணினு மரிய தமிழையே கருதிக்
   காரிய வுறுதிகொண் டெழுவீர்!

எந்தாய் வாழ்க
சுத்தானந்த பாரதி