விளையாட்டு
ஆடும்-ஓநாயும்

வரிசையாக ஒருவன் இடுப்பை மற்றவன் பிடித்தபடி சிறுவர்கள் நிற்பார்கள். இவர்கள் ஆடுகள், ஒருவன் மட்டும் சுற்றிவந்து கூட்டத்திலிருந்து பிரிபவனைப் பிடிக்க முயலுவான். அவன் ஓநாய். ஆடுகளும், ஓநாயும் பாட்டுப் பாடிக் கொண்டே விளையாடும் இந்தப் பாடல் விளாத்திக்குளம் பகுதியில் பாடப்படுவது.

ஓநாய் : என்னாட்டைக் காணோமே

ஆடு : தேடிப் பிடிச்சுக்கோ

ஓநாய் : அடுப்பு மேலே ஏறுவேன்

ஆடு : துடுப்பைக் கொண்டு சாத்துவேன்

ஓநாய் : நெல்லைக் கொறிப்பேன்

ஆடு : பல்லை உடைப்பேன்

ஓநாய் : வடிதண்ணியைக் கொட்டுவேன்

ஆடு : வழிச்சு வழிச்சு நக்கிக்கோ

ஓநாய் : கோட்டை மேலே ஏறுவேன்

ஆடு : கொள்ளி கொண்டு சாத்துவேன்

ஓநாய் : என்னாட்டைக் காணோமே?

ஆடு : தேடிப் பிடிச்சக்கோ.

சேகரித்தவர்:
S.S போத்தையா

இடம்:
விளாத்திக்குளம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்.