| 
முன்னுரை 
சங்க 
நூல்கள் பெரும்பாலும், காதலைப் பற்றியும், அரசியலைப்பற்றியுமே வலியுறுத்திக்
கூறுகின்றன. இவ்விரண்டைப் 
பற்றிக்கூறும்
 பாடல்களிலும், நூல்களிலும் அறநெறியைப்
பற்றிய செய்திகளும் ஆங்காங்கே
 கலந்து காணப்படுகின்றன;  நல்லொழுக்கத்தை
வலியுறுத்தும் நீதிமொழிகளும்
 அமைந்திருக்கின்றன. ஆயினும் நீதிகளைப் பற்றி மட்டும்-
ஒழுக்கத்தைப்
 பற்றி மட்டும் தனியாகக் கூறப்படும் சங்க நூல்கள் இல்லை.
 முதன் முதலில் ஒழுக்கத்தைப் பற்றித் தனித்தனியாக எழுதப்பட்ட நூல்கள், பதினெண்
கீழ்க்கணக்கு 
நூல்களின் தொகுதியிலேதான்காணப்படுகின்றன. பதினெண்கீழ்க்கணக்கில்
உள்ள பதினெட்டு நூல்களிலே
 நீதிநூல்கள் பதினொன்று; இது குறிப்பிடத் தக்கது.
 
 இச்சமயத்தில் ஒரு உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. சைன-பௌத்த மதங்கள்
தமிழ் நாட்டில் 
மிகுதியாகப் பரவிய பிறகுதான்
 ஒழுக்கத்தைப் பற்றித் தனியாகத் தமிழ்
நூல்கள் எழுதப்பட்டன. 
சமணமும்,
 பௌத்தமும், ஒழுக்க நெறியையே அடிப்படையாகக்
கொண்டவைகள்.
 அவைகள் கடவுள்நெறியைப் 
பற்றியோ பக்தி நெறியைப் பற்றியோ
 கவலைப்படுவதில்லை; ஆதலால் அக்காலத்தில் அறநூல்கள் 
பல பிறந்தன.
 சமண-பௌத்த மதங்களுக்குத் 
தமிழகத்திலே எதிர்ப்பு தோன்றியகாலத்தில் பக்தி மார்க்கத்தை வலியுறுத்தும் நூல்களே
 |