முகவுரை  
 

கடந்த பல்லாண்டாக என் மனவமைதி குலையாமற் காத்த, மதுரைப்
பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளர் பர். மெ. சுந்தரனார் (எம்.ஏ.,
எம்.லிட்டு., பிஎச்.டி.) அவர்கட்கும், திரு பு. மனோகரனார்க்கும்,
`தமிழ்ப்பாவை' ஆசிரியர் திரு கருணையார்க்கும், என் நெஞ்சார்ந்த நன்றி.

இந்நூல் அச்சீட்டுத் தொடர்பாகவும் வெளியீட்டுத் தொடர்பாகவும்,
திருநெல்வேலித் தென்னிந்திய சை. சி. நூ. ப. க. ஆட்சியாளர் திரு வ.
சுப்பையாப் பிள்ளை அவர்கள் செய்த உதவிகளும் குறிக்கத்தக்கனவே.

 
      தாய்மொழிப் பற்றினால் தானும் பிழைதிருத்தி
     வாய்மொழிக் கேற்ற வடித்தெழுத்தும் - தேமொழிப்பேர்
     ஆரிய வாற்றையு மச்சிட் டுதவினன்காண்
     நாரா யணஞ்செட்டி நன்கு.

     
காட்டுப்பாடி,
ஞா.தேவநேயன்
6.12.1967