74

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
ரெச்சமுன் இயல்பாயின. (பொன்னன்ன, பொன்போன்ற, பொன்னனைய, பொன்னிகர்த்த,
பொன்னொத்த1) + (குதிரை, செந்நாய், தகர், பன்றி) என 2உவமப்பண்புகொள்
பெயரெச்சமுன் இயல்பாயின. (பெரிய, சிறிய, செய்ய, இனிய, தண்ணிய) + (கமலம்,
சரோருகம், தாமரை, பங்கயம்) எனப் பல்வகைப் பண்புகொள் பெயரெச்சமுன்
இயல்பாயின. (உண்ணாத, தின்னாத) + குதிரை, செந்நாய், தகர், பன்றி) எனப்
பெயரெச்ச எதிர்மறை முன் இயல்பாயின. (உண்டன, தின்றன, வாழ்க, செல்க) +
(குதிரை, செந்நாய், தகர், பன்றி) என முற்றுவினைமுன் இயல்பாயின. சாத்தன
குதிரைகள்; செந்நாய்கள், தகர்கள், பன்றிகள் என ஆறனுருபின்முன் இயல்பாயின.
சிலகுதிரை, பலகுதிரை; செந்நாய், தகர், பன்றி என அஃறிணைப்பன்மைமுன்
இயல்பாயின. அம்ம கொற்றா; சாத்தா, தேவா, பூதா என உரையசையிடைச்சொல் முன்
இயல்பாயின.

     உண்ணாக்குதிரை, ஓடாப்பூட்கை (முருகு. 247; சிறுபாண். 83) எனவரும்
பெயரெச்ச எதிர்மறை ஆகாரவீறாகலின் விலக்கினவெனக் கொள்க.

     (பி - ம்.) 1 (அன்ன, இன்ன, என்ன) + குதிரை 2 உவமத்தொழில் கொள்
பெயரெச்சம் இயல்பாயிற்று.

(17)

 

(167)

வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய்
ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே.
 
     எ - ன், எய்தாததெய்துவித்தலும், எய்தியது 1இகந்துபடாமற் காத்தலும்
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) வாழியவென்னும் வியங்கோளின் ஈற்றுயிர்மெய் கெடலு முரித்து;
அதுகெட்டு இகரவீறாய் 2நின்றாலும் ஆண்டும் இயல்பேயாம் எ - று.

     3உம்மைகள் எதிர்மறைக்கண்ணவாகலான், கெடாமையுமுரித்தாகலும்
இயல்பிகந்துபடாமையும் கொள்க. வருமொழி உரையாமையின் நாற்கணமும் வரின்
யகரம்கெடுதலும் 4கெடாமையும் கொள்க.

     வ - று. வாழிய, வாழி, வாழிகொற்றா; சாத்தா, தேவா, பூதா, ஞெள்ளா, நாகா,
மன்னா, யவனா, வளவா, அபயா எனவரும்.

     (பி - ம்.) 1இறந்து 2நின்றாலும் இயல்பேயாம் 3உம்மை

(18)

 

(168)

சாவவென் மொழியீற் றுயிர்மெய்சா தலும்விதி.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) சாவவென்னும் மொழியிறுதியில்நின்ற உயிர்மெய் கெடுதலும் முறைமை
எ -று.

     வ - று. சாவ + குத்தினான் = சாக்குத்தினான் எனவரும்.

     உம்மையால், 1கெடாமையே வலியுடைத்தென்க.

     (பி - ம்.) 1கெடாமலே

(19)