எழுத்ததிகாரம் | 118 | முத்துவீரியம் |
மூன்றனொற்று
433. மூன்ற னொற்றே வகரம் வரும்வழி
தோன்றிய வகரத் துருவா
கும்மே.1
(இ-ள்.) மூன்றென்னும்
எண்ணின்கணின்ற னகரமெய் வகரம் வருங்கால் வந்த
வகரவடிவா மென்க.
(வ-று.) மூவட்டில். (274)
நான்கன்மெய்
434. நான்கன் மெய்யே
லகார மாகும்.
(இ-ள்.) நான்கென்னும்
எண்ணின்கண் நின்ற னகர மெய் லகரமெய்யாகத்
திரியும்.
(வ-று.) நால்வட்டில். (275)
ஐந்தனொற்று
435. ஐந்த னொற்றே
யடியொடு கெடுமே.
(இ-ள்.) ஐந்தென்னும்
எண்ணின்கண் நின்ற நகரமெய் முன்வடிவு கெடும்.
(வ-று.) ஐவட்டில். (276)
ஒன்று, இரண்டின்முன்
உயிர்
436. ஒன்று மிரண்டு
முயிர்வரு காலை
உகரங் கெடுத லாவயி னான.
(இ-ள்.) ஒரு இருவென
முடிந்துநின்ற இரண்டெண்களின் முன் உயிர்வரி
னுகரங்கெடும்.
(வ-று.) ஓரகல், ஈரகல்
எனவரும். (277)
மூன்று நான்கு ஐந்து
437. மூன்று நான்கு மைந்துந் தோன்றிய
வகரத் துருவாய் வழங்கு
மென்ப.
(இ-ள்.) மூன்றென்னும் எண்ணும், நான்கென்னும்
எண்ணும், ஐந்தென்னும் எண்ணும்
முற்றோன்றி நின்ற வகரம்
1. தொல் - எழுத் - குற்றிய
45.
|