| எழுத்ததிகாரம் | 23 | முத்துவீரியம் |
இதுவுமது
70. 1ணனமுன் னினங் க, ச, ஞ,
ப, ம, ய வவ்வரும்.
(இ-ள்.) ண, ன க்களுக்கு
முன்னர்க் க, ச, ஞ, ப, ம, ய, வ இவ்வேழு மெய்யும் வந்து
மயங்கும்.
(வ-று). குண்டலம்,
தென்றிசை; வெண்கலம், சோறு, ஞமலி, பல், மலர், மண்யாது,
மண்வலிது, பொன்கலம், சாடி, ஞமலி, பல்,
மலை, யாது, வலிது. (70)
இதுவுமது
71. யகரமுந் தகரமு நகரமுன்
னாகும்.
(இ-ள்.) நகரத்துக்கு
முன்னர் யகரமுந் தகரமும் வந்து மயங்கும்.
(வ-று.) பொருந்யாது,
சந்தம். (71)
இதுவுமது
72. 2மம்முன் ப, ய, வ மயங்கு
மென்ப.
(இ-ள்.) மகரத்துக்கு
முன்னர் ப, ய, வ க்கள் வந்து மயங்கும்.
(வ-று.) கம்பன், கலம்யாது,
நிலம்வலிது. (72)
இதுவுமது
73 3ய, ர, ழ, முன்னர்
மொழிமுதன் மெய்வரும்.
(இ-ள்.) ய, ர, ழ க்களுக்கு
முன்னர்க் க, ச, த, ந, ப, ம, வ, ய, ங, ஞ க்களும் வந்து
மயங்கும்.
(வ-று.) வேய், வேர், வீழ்,
குறிது, சிறிது, தீது, நீண்டது, பெரிது, மலிது, வலிது,
வேய்ங்குழல் ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு. (73)
இதுவுமது
74. ல, ள முன்னர்க் க, ச, ப,
வ, ய வரு மென்ப.
1. நன் - எழுத்து - 59.
2 ” ” 60.
3 ” ” 61.
|