| எழுத்ததிகாரம் | 26 | முத்துவீரியம் |
எகரம் தனித்து நின்றே
ஈறாகும்
84. எகரம் புள்ளியோ
டிணைந்தீ றாகா.
(இ-ள்.) எகரவுயிர்
மெய்களோடு கூடியீறாகாவாம். (84)
ஒகரம் நகரத்தோடு
ஈறாகும்
85. ஒகர நகரமெய் யோடிறு
வாகும்.
(இ-ள்.) ஒகரவுயிர்
நகரமெய்யோடீறாகும்.
(வ-று.) நொ. (85)
ஒள ககர வகரத்தோடு
ஈறாகும்
86. ஒளகான் ககர வகரமோ
டன்ன.
(இ-ள்.) ஒளகாரவுயிர்
ககரவகரங்களோ டீறாகும்.
(வ-று.) கௌ, வௌ.
(வி-ரை.)
‘‘குற்றுயிர் அளபின்
ஈறாம் எகரம்
மெய்யொடு ஏலாது ஒந்நவ் வொடாம் ஒள
ககர வகரமொ டாகும் என்ப’’
(எழுத் - 52)
என்ற நன்னூலின் கருத்தை
83 முதல் இந் நூற்பா வரையுள்ள நூற்பாக்களில்
காணலாம். (86)
உகர ஊகாரம் நகரத்தோடு
ஈறாகா
87. உ, ஊ, நகரமோ டுறாவென
மொழிப.
(இ-ள்.) உகர ஊகார உயிர்
நகரமெய்யோடு ஈறாகாவாம்.
(வி-ரை.) ‘இந்நூற்பா உ
ஊகாரம் நவவொடு நவிலா’ என்ற தொல்காப்பிய
நூற்பாவை
யுளங்கொண்டு கூறியதாகும். இதற்குரிய உரை
பொருத்த மற்றதாகும். இதுபற்றி யான்
தொல்காப்பிய இளம் பூரண ருரையில் விளக்கி
யுள்ளேன். அது வருமாறு:-
உ ஊ என்பன வொன்றுமே
நகரத்தொடும் வ கரத்தொடும் வாரா எனப் பொருள்
கூறினர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்.
ஆனால் தொல்காப்பியரே
‘செலவினும் வரவினும் தரவினும்’ என்றும், ‘அளவும்
நிறையும்’ என்றும், ‘களவினுட் டவிர்ச்சி’
என்றும் நூற்பா செய்துள்ளமையானும், ‘புன்கண்
உடைத்தாற் புணர்வு’ (குறள்-52) எனச் சான்றோர்
செய்யுளில் வருதலானும், இவர்கள்
கருத்து இந்
நூற்பாவிற்குப் பொருந்துவதன்றாம்.
|