பக்கம் எண் :
 
46நேமி நாதம்

    எ - ன்:  திணைகளின்கண் ஐந்து பாலும் அறியும் சொற்களின்
ஈற்றெழுத்து இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.

  
 இ - ள்:  தத்தமக்குப் பொருந்திய வினையையும், வினைக்குறிப்பையும்
கொண்டு, உயர்திணைக்கு, அன் ஆன், இறுதியாய் வருவன ஆடூஉ
வறிசொல்; அள் ஆள் இறுதியாய் வருவன மகடூஉ வறிச்சொல்; அர், ஆர், ப இறுதியாய் வருவன பலரறி சொல்; அவ்வண்ணமே, அஃறிணைக்கும், வினையையும் வினைக்குறிப்பையும் கொண்டு, துவ்வும், றுவ்வும், டுவ்வும் இறுதியாய் வருவன ஒன்றறி சொல்; அவ்வும், ஆவும், வவ்வும் இறுதியாய் வருவன பலவறி சொல் எ - று.

    தன்வினை கொண்டு என்பது மத்திம தீபம்.

    வினைக்குறிப்பு என்பது பெற்றவாறு என்னையோ? எனின், வினைக்
குறிப்பும் வினையின் வேறல்ல; ஆதலாற் பெறும்.

    
வ - று: அன் - உண்டனன், உண்ணா நின்றனன், உண்குவன்
எனவும்; ஆன் - உண்டான், உண்ணாநின்றான், உண்பான் எனவும், இவை,
காலத்தியறலான் வினை.

     கரியன், செய்யன், கரியான், செய்யான் இவை காலந் தோன்றாமையான்
வினைக் குறிப்பு.

    
அள் - உண்டனள், உண்ணாநின்றனள், உண்குவள் எனவும்; ஆள் -
உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் எனவும் இவை வினை.

     கரியள், செய்யள், கரியாள், செய்யாள் இவை வினைக் குறிப்பு.

   
 அர் - உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர் எனவும்; ஆர் -
உண்டார், உண்ணா நின்றார், உண்பார் எனவும் இவை வினை.

      கரியர், செய்யர், கரியார், செய்யார் இவை வினைக் குறிப்பு.

    
 ப - உண்ப, தின்ப எனவும் இவை வினை. உயர்திணை முப்பாலும்
அடைவே கண்டுகொள்க.

   
  து - உண்டது, உண்ணாநின்றது, உண்பது இவை வினை.
கரியது, செய்யது இவை வினைக் குறிப்பு.

   
  று - கூயிற்று, தாயிற்று இவை வினை.