பக்கம் எண் :
 
118

யாப்பருங்கலக் காரிகை

 
  படைப்பரிமான் றோரினொடும் பரந்துலவு மறுகினிடைக்
கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே.
 
இதுதரவு.
 

ஆங்கொருசார்,
 

இது தனிச்சொல்.
 
  'உச்சியார்க் கிறைவனா யுலகெலாங் காத்தளிக்கும்
பச்சையார் மணிப்பைம்பூட் புரந்தரனாப் பாவித்தார்
3வச்சிரங் காணாத காரணத்தான் மயங்கினரே.
 

ஆங்கொருசார்,
 

  'அக்கால மணிநிரைகாத் தருவரையாற 4பகைதவிர்த்து
வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்
5சக்கரங் காணாத காரணத்தால் சமழ்த்தனரே.
 

ஆங்கொருசார்,
 

  'மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங்
கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார்
வேல்கண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே.
 
இவை மூன்றுந் தாழிசை.
 

அஃதான்று,
 

இது தனிச்சொல்.
 
  'கொடித்தே ரண்ணல் கொற்கைக் கோமான்
நின்றபுக ழொருவன் செம்பூட் சேஎய்
என்றுநனி யறிந்தனர் பலரே தானும்
ஐவரு ளொருவனென் றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி
மன்னவன் வாழியென் றேத்தத்
தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே.'
 
இது சுரிதகம்.
 

கொண்ட பகை. சமழ்த்தனர் - நாணினர். செங்கோல் - சிவந்த அம்பு ஐவருள் ஒருவன்
;ஐவர் - மும்மூர்த்திகள், முருகன். இந்திரன்.
 

     (பி - ம்.) 3. வச்சிரங்கைக். 4. பிணிதவிர்த்து. 5. சக்கரங்கைக்