'சிந்தடி நான்கு அறைதரு காலை விருத்தம்' எ - து. முச்சீரடி நான்காய் வருவது வஞ்சிவிருத்தம் எனப்படும் எ - று. |
| 'சிந்தடி நான்காய் 2வருவது வஞ்சிய தெஞ்சா விருத்த மென்மனார் புலவர்' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 92.) |
வரலாறு |
| 'சோலை யார்ந்த சுரத்திடைக் காலை 3யார்கழ லார்ப்பவும் மாலை மார்பன் வருமாயின் நீல வுண்க ணிவள்4வாழும்.' ['இருது வேற்றுமை .......கையினாய்.'] |
(கா. 13, மேற்.) |
இவை சிந்தடி நான்காய் வந்தமையான் வஞ்சிவிருத்தம். |
'தனிச்சொல் வந்து மறைதலில் வாரத்தினால் இறும் வஞ்சி' எ - து குறளடி வஞ்சிப்பாவும் சிந்தடி வஞ்சிப்பாவும் தனிச் சொற் பெற்று, ஆசிரியச் சுரிதகத்தால் இறும் எ - று. |
'மறைதலில் வாரம்' என்று சிறப்பித்தவதனால் வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தால் இறுவது அல்லது வெள்ளைச் சுரிதகத்தால் இறப்பெறாதெனக் கொள்க. |
| 'தூங்க லிசையன வஞ்சி மற்றவை ஆய்ந்த தனிச்சொலோ டகவலி னிறுமெ' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 90.) |
வரலாறு |
| 'பூந்தாமரை...........பெருவண்மையனே' |
(கா. 9. மேற்.) |
என்னும் குறளடி வஞ்சிப்பா நாளுமென்னும் தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்றதெனக் கொள்க. |
| '(1) கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன |
|
(1) கொடி வாலன - நீண்ட வால்களை யுடையன. குருநிறத்தன - மிக்கதிறத்தன. உளையன - பிடரிமயிரை யுடையன. பணை எருத்தின் - பருத்த |
|
(பி - ம்.) 2. வருவன வஞ்சி எஞ்சா. 3. யார்ந்த கழலார்ப்ப. 4. வாழுமே. |