பக்கம் எண் :
 
26

யாப்பருங்கலக் காரிகை

 
     அருகும் என்பதனால் அச்சீர் செய்யுளகத்து 2அரிதாக அன்றி வாரா எனக்
கொள்க.
 

வரலாறு

1. தேமாந் தண்ணிழல் 2. புளிமாந் தண்ணிழல்
3. கருவிளந் தண்ணிழல் 4. கூவிளந் தண்ணிழல்
எனவும்,
5. தேமாந் தண்பூ 6. புளிமாந் தண்பூ
7. கருவிளந் தண்பூ 8. கூவிளந் தண்பூ
எனவும்,
9. தேமா நறும்பூ 10. கூவிள நறும்பூ
11. கருவிள நறும்பூ 12. கூவிள நறும்பூ
எனவும்,
13. தேமா நறுநிழல் 14. புளிமா நறுநிழல்
15. கருவிள நறுநிழல் 16. கூவிள நறுநிழல்

எனவுங் கொள்க.
 
     'இனி அவற்றுள் கண்ணிய 3பூவினம் காய்ச்சீர் அனைய' எ-து. அந் நாலசைச் சீர்
பதினாறனுள்ளும் பூ என்னுஞ் சொல் இறுதியாகிய நேரீற்றுப் பொதுச் சீரெட்டும் காய்
என்னுஞ் சொல் இறுதியாகிய வெண்பாவுரிச்சீரே போலக் கொண்டு, வருஞ்சீர்
முதலசையோடு ஒன்றியது வெண்டளையாகவும் ஒன்றாதது கலித்தளையாகவும் கொண்டு
வழங்கப்படும் எ-று.
 
     'இனி அவற்றுள் கண்ணிய 3பூவினம் காய்ச்சீர் அனைய' எ-து. அந் நாலசைச் சீர்
பதினாறனுள்ளும் பூ என்னுஞ் சொல் இறுதியாகிய நேரீற்றுப் பொதுச் சீரெட்டும் காய்
என்னுஞ் சொல் இறுதியாகிய வெண்பாவுரிச்சீரே போலக் கொண்டு, வருஞ்சீர்
முதலசையோடு ஒன்றியது வெண்டளையாகவும் ஒன்றாதது கலித்தளையாகவும் கொண்டு
வழங்கப்படும் எ-று.
 
     'அசைச்சீர் இயற்சீர் ஒக்கும்' எ - து. நாள் மலர் என்னுஞ் ஓரசைச்சீர்
ஆசிரியவுரிச்சீரே போலக் கொண்டு, வருஞ்சீர்
 

     உரைக்க வேண்டுழி உரைத்தல். இங்கே அதிகரித்த பொருள் தேமா, புளிமா
முதலிய நான்கும் எனக் கொள்க.
 

     (பி - ம்.) 2. அருகியன்றி. 3. பூவிளகாய்.