பக்கம் எண் :
 

செய்யுளியல் 'ஒன்றும் பலவும்'

75

 
  திரண்டு துணியா யிடைநனி 7போழ்ந்தும்
நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா'
 
என்றார் காக்கைபாடினியார்.
['உருவுகண் டெள்ளா வுடையார் குறண்மட வாய்தடமண்
டரிய வரைகீண் டிருகுற ணேரிசை தாமரையின்
கருமமு மார்த்தவும் வஞ்சியுங் காமர் தனிச்சொன்முன்னா
நெரிநுண் கருங்குழ னேரிழை யாசிட்ட நேரிசையே.'
 
     இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே குறள்வெண்பாவிற்கும், இருகுறணேரிசை
வெண்பாவிற்கும், ஆசிடை நேரிசைவெண் பாவிற்கும் காட்டிய இலக்கியங்களை
முதனினைத்துக் கொள்க.] (3)

     (பி - ம்.) 7. போழ.

- - -
 

இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா

24. ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்
இன்றி நடப்பினஃ தின்னிசை துன்னு மடிபலவாய்ச்
சென்று 1நிகழ்வது பஃறொடை யாஞ்சிறை வண்டினங்கள்
துன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே.
 
     இ - கை. இன்னிசை வெண்பாவும் பஃறொடை வெண்பாவு மாமாறு உணர்த்....று.

      'ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி நடப்பின் அஃது
இன்னிசை துன்னும்' எ - து, ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வந்து
நான்கடியாய்த் தனிச் சொலின்றி நடப்பின் அஃது இன்னிசை வெண்பா எனப்படும் எ-று.
 

வரலாறு

(1) 'வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகற்றம் வாணாள்மேல் வைகுதல்
2வைகலை வைத்துணரா தார்.'
 

(நாலடி. 39)
 


     1. வைகலும் வைகல் - நாள்தோறும் கழிவு. வைகலை - நாட்களை. வைகும் என்று
- கழியும் என்று. பொழுது போக்கலை இன்புறவாகக் கருதுவர் என்றபடி.
 

     (பி - ம்.) 1. நிகழ்வ. 2. வைகலும்.