இனிக்
கருவிக் கருத்தன்
என்பது-வாள் எறியும், சுரிகை குற்றும்,
இம் மிடா நாற்குறுணி அரிசிச் சோறு அடும் என இத்தொடக்கத்தன;
இனிக்,
கருமக் கருத்தன் என்பது-திண்ணை மெழுகிற்று, கலங்
கழுவிற்று, மரங் குறைத்தது என்று சொல்லுவது.
‘அறியக் கிடந்த
இடம்’ என்னும் அச்சொல் கருமக்கருத்தனாய்
நின்றது என்பது,
அஃதேயெனின், இவ்வகை கருமக்கருத்தனாகச்’ சொல்லுதற்கு
இலக்கணமுண்டோ எனின், உண்டு;
‘செயப்படு பொருளைச்
செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே’ (வினையியல்-49)
என்பது.
அஃதேயெனின், குறியெனப்படுவ என்றாகாதே சூத்திரஞ்
செயற்பாலது; என்னை, இரவுக்குறி பகற்குறி என்று இரண்டு
சொல்லுகின்றமையின். அஃதன்றி இடம் என்னும் ஒருமை நோக்கிக்
‘குறியெனப்படுவது’ என்றார் என்பது.
(18)
சூத்திரம்-19
இரவுக் குறியே இல்வரை இகவாது.
என்பது என்னுதலிற்றோ எனின், மேற்சூத்திரத்துட் குறி இரண்டென்றார்,
அவற்றுள் இரவுக்குறி நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: இரவுக் குறி என்பது-இரவின்கட்
குறியிடம்
என்றவாறு; இல்வரை இகவாது என்பது-இல்லிடத்தைவிட்டு நீங்காது
என்றவாறு.
எனவே, புறத்தன்று என்றவாறாம்.
‘இரவுக் குறியே இல்வரை இகவா
துணர உணர்த்த உரையி னான’
என்றார் பிறரும் எனக்கொள்க.
இரவின்கட்குறி இல்வரை இகவாது எனப், பகற்குறி இல்வரை
இகக்கும் என்பது சொல்லினார்; என்னை, இராப்புள் உண்ணா என்றார்க்கு,
பகற்புள் உண்ணும் என்பது முடிந்தது; இனி, இராக்குறி யென்று ஆகற்பாலது
இரவுக்குறி யென்றாயிற்றுச் செய்யுளாகலான்.
|