| 
        
       
                              சூத்திரம்-45
 புகழும் கொடுமையும் கிழவோன் மேன.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகற்கு உரியதோர் இலக்கணம்
 உணர்த்துதல் நுதலிற்று.
 
 இதன் பொருள்: புகழும் கொடுமையும் என்பது - புகழ் என்பது
 தக்கான் எனப்படுதல்; கொடுமை என்பது தகான் எனப்படுதல் என்றவாறு;
 கிழவோன் மேன என்பது-அவை இரண்டும் தலைமகன்கண்ண
 என்றவாறு.எனவே, இத்தன்மைத்துத் தலைமகன் ஒழுகலாறு என்றவாறு.
 அஃதாமாறு தலைமகள்மாட்டு உறைந்தக்கால் தக்கான் எனப்படுதலும்,
 பரத்தையர்மாட்டு உறைந்தக்கால் தகான் எனப்படுதலும் என்றவாறு.
 
 யாராலோ அவை சொல்லப்படுவது எனின், வாயில்களான் எனக்
 கொள்க. அவர், ‘புகழுடையன்’ என்பதற்குச் செய்யுள்:
 
 தக்கான் என்றல்
 
 ‘கோடிய நீள்புரு வத்து மடந்தை 
        கொழும்பணைத்தோள்
 வாடிய வாட்டம் உணர்ந்து மனையிடை வந்தமையால்
 ஆடியல் யானை அரிகே சரிதெவ்வர் போலகன்று
 நீடிய காதலர் தாமே பெரியர்இந் நீள்நிலத்தே.’             
        (289)
 
 இனி, அவர், ‘தகான்’ என்றதற்குச் செய்யுள்:
   
        
                              
        தகான் என்றல்   
          
        
       
        ‘விண்டுறை தெவ்வர் விழிஞத் தவியவெள் 
        வேல்வலங்கைக்கொண்டுறை நீக்கிய கோன்வையை நாடன்ன கோல்வளையிவ்
 வண்டுறை கோதை வருந்தநல் லாரில்லுள் வைகுதலால்
 தண்டுறை சூழ்வயல் ஊரன் பெரிதும் தகவிலனே’            
        (290)
 
 என்பது.                                                      
        (10)
 |