பக்கம் எண் :
 
22இறையனார் அகப்பொருள்

     செய்தி - வரகுக்குக் களைகட்டலும், அவை அறுத்தலும்,
கடாவிடுதலும், நிரைமேய்த்தலும்;
    
பண் - முல்லை.
‘பிறவும்’ என்றதனால்,
    
தலைமகன் பெயர் - குறும்பொறை நாடன்;
    
தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி; (இப் பெயர் மருத நிலத்துத்
தலைமகட்கும் உரிய;)
    
பூ - முல்லையும், தோன்றியும்;
    
நீர் - கான்யாறு;
    
ஊர் - பாடியும், சேரியும்; 
    
மக்கள் பெயர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
எனப்படும்.
மருதத்துக்குத்,
    
தெய்வம் - இந்திரன்;
    
உணா - செந்நெல்லும், வெண்ணெல்லும்;
    
மா - எருமையும், நீர்நாயும்;
    
மரம் - வஞ்சியும், காஞ்சியும், மருதும்;
    
புள் - நீர்க்கோழியும், தாராவும்;
    
பறை - மணமுழவும், நெல்லரி கிணையும்;
    
செய்தி - நெல்லரிதலும், அவை கடாவிடுதலும், பயிர்க்குக்
களைகட்டலும்;
    
யாழ் - மருதயாழ்;
‘பிறவும்’ என்றதனால்,
    
தலைமகன் பெயர் - ஊரன், மகிழ்நன்;

     தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி;
    
பூ - தாமரைப்பூவும், செங்கழுநீர்ப்பூவும்;
    
நீர் - மனைக்கிணறும், பொய்கையும்;
    
மக்கள் பெயர் - கடையர், கடைசியர், உழவர், உழத்தியர்;