| 
       
     
          செய்தி - வரகுக்குக் களைகட்டலும், அவை அறுத்தலும், 
     கடாவிடுதலும், நிரைமேய்த்தலும்; 
     
     
     பண் - முல்லை. 
     ‘பிறவும்’ என்றதனால், 
     
     
     தலைமகன் பெயர்
     - குறும்பொறை நாடன்; 
     
     
     தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி; (இப் பெயர் 
     மருத நிலத்துத் 
     தலைமகட்கும் உரிய;) 
     
     
     பூ
     - முல்லையும், தோன்றியும்; 
     
     
     நீர் - கான்யாறு; 
     
     
     ஊர் - பாடியும், சேரியும்;   
     
     
     மக்கள் பெயர்
     - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் 
     எனப்படும். 
     மருதத்துக்குத், 
     
     
     தெய்வம் - இந்திரன்; 
     
     
     உணா
     - செந்நெல்லும், வெண்ணெல்லும்; 
     
     
     மா
     - எருமையும், நீர்நாயும்; 
     
     
     மரம் - வஞ்சியும், காஞ்சியும், மருதும்; 
     
     
     புள் - நீர்க்கோழியும், தாராவும்; 
     
     
     பறை 
     
     - மணமுழவும், நெல்லரி கிணையும்; 
     
     
     செய்தி
     - நெல்லரிதலும், அவை கடாவிடுதலும், பயிர்க்குக்  
     களைகட்டலும்; 
     
     
     யாழ் - மருதயாழ்; 
     ‘பிறவும்’ என்றதனால், 
     
     
     தலைமகன் பெயர் - ஊரன், மகிழ்நன்; 
     
          
     
     தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி; 
     
     
     பூ
     - தாமரைப்பூவும், செங்கழுநீர்ப்பூவும்; 
     
     
     நீர்
     - மனைக்கிணறும், பொய்கையும்; 
     
     
     மக்கள் பெயர் - கடையர், கடைசியர், உழவர், 
     உழத்தியர்; 
				
			
				
				  |