பிறவுமன்ன. முதற் குறிப்புச் சொல் லிருவகைப்படும். முதலெழுத் தொன்றைக் காட்டினவு முதன்மொழியொன்றைக் காட்டினவு மெனக்கொள்க. - குறட்செய்யுள். - "குன்றாவி ளையுளுயர் நிலந்துன்புறுத்தன், வென்றேயிரப்பாடன்கை." என்பதிஃதேழிசை குறித்துரைத்ததாம். இவற்றுட் குன்றாவென்புழி - குர னரம்பும், விளையு ளென்புழி - விளரி நரம்பும், உயர்நில மென்புழி - உழை நரம்பும், துன்புற்றென்புழி - துத்த நரம்பும், தாவென்புழி - தாரநரம்பும், இரப்பா னென்புழி - இளி நரம்பும், கை யென்புழி - கைக்கிளை நரம்பும், எனக்குறிப்பாக வேழிசைமுத னின்ற வோரெழுத்தானறிய வந்தன. ஆயினு மிவ்வகை யிருளெனச் சிறு பான்மையென்றுவழங்கற்க. அன்றியும், - காரிகை. - "வளம்படவென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங், களம்படக் கொன்று கலிக்கரிதாயகண் ணார் கொடிபோற், றுளங்கிடைமாதே சுறமறிதொன்னலத்தின் புலம்பென், றுளங்கொடு நாவல ரோதினர் வஞ்சிக்குதாரணமே." என விக்காரிகையுட் பலபாட்டு முதனின்றவோரிரு மொழிகாட்டி வெள்ளைமுதலியபாவிற் குதாரணமென்ற குறிப்பினா லவ்வவப் பாட்டறிய வந்தன. பிறவுமன்ன. பொருட்டொகைகுறிப்புச்சொல்லாவன. - வெண்பா. - "புறநிலை ஆறொழித்தைந்தடக்கி முன்னமூன்றாண்டளிக்கு, மீறொழித்த தானொருவ னென்றேத்தி, யூறொழிப்ப, வாளா யிரண்டயிர்க மாய்ந்தனகா லிவ்வல்லாற், கேளாயுடன் வருவதில்." என்பன விவற்றுட் பலதொகை வந்துகூடிய வினையாலறியவந்தவாறுகாண்க. ஆகையில் வைரவ முத லறுசமயமும், கைப்பு முத லறுசுவையும், கார் முத லறுபருவமும், அரிச்சந்திரன் முத லறுசக்கரவர்த்திகளும், வேற்றானைமுத லறுதானையு, மிவை முதலாயின பலவுள வெனினு மிங்ஙனமா றொழித் தென்ற குறிப்பினாற் காமக் குரோத முலோப மோகம் பய மதமென வாறறியவந்தன. அன்றியு மைவண்ணம், ஐந்திணை பஞ்சபூதிய முதலாயி னவுளவெனினு, மிங்ஙன மைந்தடக்கி யென்ற குறிப்பினாற் கண்முத லைம் பொறியறிய வந்தன. அன்றியுங், காம முதன் முக்குற்றமும், தன்மை முதன் மூவிடமு முதலாயி னவுளவெனினு, மிங்ஙன மூன்றாளு மென்ற குறிப்பினால் வான் முதன் மூவுலகறிய வந்தன. மீண்டு மூன்றினா லாளுமென்ற குறிப்பினா லாக்கல், காத்த லழித்த லென முத்தொழிலறிய வந்தன. அன்றியு மிம்மை மறுமை யென் றிருமையு நல்வினை தீவினையென் றிருவினையு முதலாயின வுளவெனினு மிரண்டயிர்க மென்ற குறிப்பினா லில்லறந் துறவற மறிய வந்தன. ஆயினு மிவ்வகைக் குறிப்புமொழிக ளறிதற் கரியன வாகையிற் சுருட்டிக் கிடக்கும் பட்டாடையின் முன்றானையைக் கொள்வோர் காணக்காட்டும் வாணிகர் போலத் தொகுத் தவற்றுண் முதற்பொரு டோற்றித் தொகைமொழி வருவது தெளிவெனக் கொள்க. (உ-ம்.) வெண்பா. - "புறநிலை காமமுத லாறொழித்துக் கண்முதல வைந்தடக்கி, யேம முதலோனொருவ னென்றேத்தி - வாமமுதிர், வாளா யறஞ்செய்க மாய்ந்தனகாலிவ் வல்லாற், |
|
|