பக்கம் எண் :
 
150தொன்னூல்விளக்கம்
     (இ-ள்.) நிறுத்த முறையானே யடியிலக்கண மாமாறுணர்த்துதும். கூறிய தளையாற்
பிணிக்கப்பட்ட சீரொடு வருவன வடியெனப்படும். இவற்றுள் இருசீரான் வந்தவடியே -
குறளடி, எ-ம். முச்சீரான் வந்தவடி யே - சிந்தடி, எ-ம். நாற்சீரான் வந்தவடியே -
அளவடி, எ-ம். ஐஞ்சீரான் வந்த வடியே - நெடிலடி, எ-ம். ஐஞ்சீரின் மிக்கசீரான்
வந்தவடியே - கழிநெடிலடி யெனவும் படும். இதையே யெண்சீரின் மிக்க சீரான்வரின்
சிறப்பில் லாயின. - "குறளொரு பந்த மிருதளை சிந்தா, முத்தளை யளவடி நாற்றளை
நெடிலே, மிக்கன கழிநெடி லென்றிசி னோரே என்மரு முளரே." அன்றியும், -
"இரண்டுமுதலா வெட்டீறாகத், திரண்டசீரா லடிமுடிவுடைய, விறந்து வரினு மடிமுடி
வுடைய, சிறந்த வல்ல செய்யு ளுள்ளே." என்றார் காக்கைப் பாடினியார். இவற்றிற்
குதாரணம். - "மாதுமாண்பெழக், கோது கொன்றுநோய்க், காதுகாத்தனை,
பாதுபாவையே." எனக் குறளடியால் வந்தசெய்யுள். - "குயின்மருட்டிய கோண்மொழி,
யயின்மருட்டிய வம்பக, மயின்மருட்டிய மாண்புடைக், குயின்மருட்டிய கூந்தலாள்."
எனச் சிந்தடியால் வந்தசெய்யுள். - "பருவிலார் மனமெனமுகில் பரந்துநூற், கருவிலார்
மனமெனக் கருக வந்தரந், திருவிலார் மனமெனத் தேம்ப மாங்குயின், மருவிலார்
மனமென மஞ்ஞை யாடுமால்." என வளவடியால் வந்த செய்யுள். - "இன்றே யுள்ளார்
நாளை யிறப்பா ரிதுவல்லாற், பொன்றா ருண்டோ பூதலத் தெங்கும் புகழ்விஞ்சிக்,
குன்றா மின்னார் காசொளி கொண்மா முடிகொண்டே, நின்றா ருள்ளும் பொன்றுயிர்
நீங்கா நிலையார் யார்." என நெடிலடியால் வந்தசெய்யுள். - "நூல்வழிப் புகழேபோன்று
நொடிப்பினிற் பரந்தமேகம், வேல்வழி யொளியேபோன்று மின்னியார்த் திறைவ
னன்பின், பால்வழிப் பயனேபோன்று பகலிரா வளவிற்றூவிக், கோல்வழிப்
படமேபோன்று கூவெலாங் கொழித்த தன்றே." என வறு சீர்க் கழிநெடிலடியால்
வந்தசெய்யுள். - "கணிகொண் டலர்ந்த நறை வேங்கையோடு கமழ்கின்ற காந்தளிதழா,
லணிகொண்டலர்ந்த வனமாலை சூடி யகிலாவிகுஞ்சிகமழ, மணிகுண்டலங்க ளிருபாலும்
வந்து வரை யாகமீதுதிவளத், துணிகொண்டிலங்கு சுடர்வேலினோடு வருவா னிதென்
கொ றுணிவே." - என வெழுசீர்க் கழிநெடி லடியால் வந்த செய்யுள். -
"மூவடிவினாலிரண்டு சூழ்சுடருநாண் முழுதுலகுமூடியே முளைவயிரநா றித்,
தூவடிவினாலிலங்கு வெண்குடையினீழற் சுடரொளியை யடிபோற்றிச்
சொல்லுவதொன்றுண்டாற், சேவடிகடாமரையின் சேயிதழ்கடீண்டச் சிவந்தனவோ
சேவடியின் செங்கதிர்கள்பாயப், பூவடிவுகொண்ட னவோ பொங்கொளிகள் சூழ்ந்து
பொலங்கொளாவா லெமக்கெம் விண் ணியர்தங்கோவே." - என வெண்சீர்க்கழி
நெடிலடியால் வந்தசெய்யுள். - "இடங்கை வெஞ்சிலை வலங்கைவாளியி னெதிர்ந்த
தானையை யிலங்கும ழியின் விலங்கியோன், முடங்குவாலுளை மடங்கன்மீமிசை முனிந்து
சென்றுடன் முரண்டராசனை முருக்கியோன், வடங்கொண் மென்முலை