பக்கம் எண் :
 
233சொல்லெஞ்சணி
எ-து. பிறரின்னாசெயினு மவர்செய்த நன்றுதா னுள்ளக் கெடுமென்று பிறருந் தானுமென
வெஞ்சிய விருபெ யர்கொண்டு முடிக்கவேண்டலிற் பெயரெஞ்சணி யாயிற்று.
வினைச்சொல் லாயினும் வினையைப்பற்றிவரு முருபு சொற்களாயினு மெஞ்சவரின்
வினை யெஞ்சணி யெனப்படும். - "நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்,
கினத்தியல் பதாகு மறிவு." எ-து. நீர்சேருநிலத்தியல்பானது திரிவதுபோல
மாந்தர்சேருமினத்தியல்பானே தமக்காகு மறிவென்று முகிக்கவேண்டலிற் சேருமென்றும்
வினைச்சொல் லெஞ்சியவாறு. - "சிறுவரையே யாயினுஞ் செய்த நன்றல்ல, துறுபய
னில்லை யுயிர்க்கு." எ-து. தன்னாற் செய்யப்பட்ட நன்றென்று முடிக்க வேண்டலி
லாலெனும் வேற்றுமை யுருபுசொல்லெ ஞ்சியவாறு. ஆகையி லீரிடத்தும்
வினையெஞ்சணி யாயிற்று. - "இலங்குவா ளிரண்டினா லிருகைவீசி." எ-து.
இருகையுமென்று முடிக்கவேண்டலி னும்மை யெஞ்சணி யாயிற்று. ஆகையி லும்மை
யெஞ்சணியு மும்மைத் தொ கையுமொக்கும். - "இசையா வொருபொரு ளில்லென்றல்
யார்க்கும், வ சையாவ தெங்கு மில்." எ-து. இல்லென்று சொல்லுத லெனமுடிக்க
வேண்டலிற் சொல்லெஞ்சணி யாயிற்று. - ஒரு சொல் தன்னிலையன்றிப் பிரிந்து
மற்றவிடத்துங் கூட்டல் வேண்டுழிப் பிரிநிலை யெஞ்சணி யெனப்படும். - வெண்பா. -
"அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம், பொறுமின் பிறர்கடுஞ் சொற் போற்றுமின் வஞ்சம்,
வெறுமின் வினைதியார் கேண்மை யெஞ்ஞான்றும், பெறுமின் பெரியார்வாய்ச் சொல்."
என்ப திதிலே யெஞ்ஞான்று மெனுஞ்சொல் மற்றவழியும்கூட்டி யறிமினெஞ்ஞான்று
முதலிய வந்து முடிக்கவேண்டலிற் பிரிநிலை யெஞ்சணி யாயிற்று. இதுவே முத-லிடை-
கடைப்-பற்றிவரின் மேற்காட்டிய தாப்பிசையாயினு மளைமறி பாப்பாயினு மென்று
வழங்கும். - "உண்ணலு மீதலு மாயிரண் டல்லது, முண்டோ பொருட்கட் பயன்." எ-து.
உண்ணலு மீதலுமெனவென்று முகிக்கவேண்டலி லெனவே யெஞ்சணி யாயிற்று. -
சொன்னவையன்றி மற்றொன்று தோன்றக்கூற லொழியிசை யெஞ்சணி யெனப்படும்.
"கற்றோருங் காணலரிது' என்றாற் கல்லாதவர்க் கெளிதல்லதெனத் தோன்றலி
லொழியிசை யெஞ்சணி யாயிற்று. - ஓகார வெதிர்மறையு மும்மையெதிர்மறையு மென
வெதிர்மறையெஞ்சணி யிருவகைப்படும். ஆகையி லொன்றை மறுக்க வெதிர்
மறைச்சொல்லின்றி யோகாரம்வரினு மும்மைவரினு மவ்வலங்காரமாகும். செய்யே
னென்பதற்கு - யானோ செய்வே, னென வோகார வெதிர்மறை யெஞ்சணி யாயிற்று.
இவ்வெழுத் திவ்வழி திரியவும் பெறுமென்றாற் றிரியாமையும் வருமெனத் தொன்றலி
லும்மை யெதிர்மறை யெஞ்சணி யாயிற்று. - 'ஒல்லென நதிவந்தோடு,' மென்புழி
ஒல்லென வொலித்தென முடிக்கவேண்டலி னிசையெஞ்சணி யாயிற்று. அங்ஙனம்
அம்மென லிம்மெனல் வந்தொலி வினையெஞ்ச வருவன வெல்லா மிவ்வலங்கார மாகும்.
என்னை. ஒலி யெனினு மிசை யெனினு மொக்கும். அன்றியு மிருபயன்