பக்கம் எண் :
 
236தொன்னூல்விளக்கம்
320. மற்றவற் றினமா மாத்திரைச் சுருக்கந்
திரிப தாதி சேர்ந்தன பிறவே.
 
     (இ-ள்.) சமவணியாமாறுணர்த்துதும். இருமொழி பலமொழி தம்
முண்மாத்திரையானு மோரெழுத்தானும் வேறுபாடுடைய வாதலன்றித் தம்மு ளொப்ப
வருவது சமவணியெனப்படும். (வ-று.) எரியோ வெரியோ வங்கண் டொன்றுவதெனவும்,
பாடவோ பாடவோ வந்தாயெனவும், கந்தரக் கந்தாரத்தின்புகுக்குங் காந்தாரமெனவு,
மிவை மாத்திரை யொன்று வேறுபட வந்த சமவணி. பிறவுமன்ன. -
திருக்காவலூர்க்கலம்பகத் தாழிசை. - "வீதி மந்திர நூலியே, யாதி தந்திர வேலியே,
வென்றி தந்த மடங்கலே, நன்றி தந்த வடங்கலே, நீதி சுந்தர கோலியே, கோதி லந்தர
சீலியே, நிந்தை நீங்கு மனந்தமே, யெந்தை யீங்கரு ளந்தமே, பாதி யிந்தணி பாதியே,
சோதி வந்தணி சோதியே, பங்க நீத்தலர் கஞ்சமே, பங்க நீத்தமர் தஞ்சமே, யோதி
யம்பர ஞானமே, யேதி லும்பர மானமே, யோவ லீரென தன்பளே, காவ லுரர
சென்பளே." என்பதிதனு ளோவ்வொரேழுத்தே மாறி வேறுபடுவதன்றி யொன்றிய
பலசொல்லிணைந்து வந்த சமவணி. பிறவுமன்ன. அன்றியு மாத்திரை வேறுபட வருஞ்
சம மறைத்துரைப்பது மாத்திரைச் சுருக்க மெனப்படும். (வ-று.) - வெண்பா. -
"நேரிழையார் கூந்தலினோர் புள்ளி பெற நீண்மரமா, நீர்நிலையோ புள்ளிபெற
நெருப்பாஞ் - சீரளவு, பாட்டொ ன்றொழிப்ப விசையா மதனளவு, மீட்டொன் றொழிப்ப
மிடறு." என்பதி தனுள், ஓதி - கூந்தல், ஒதி - மரம், ஏரி - நீர்நிலை, எரி - நெருப்பு,
காந்தாரம் - பாட்டு - காந்தாரம் - இசை, கந்தரம் - மிடறு. பிறவுமன்ன. அன்றியு
மெழுத்துவே றுபடவருஞ் சமவணி வகையி னடுவுயிரெழுத்துளமொழியே யொரு
பொருளாகவு, மவற்றுண் முதலொழித்தொழிந்த மற்றீரெழுத்து, மிடையெ
ழுத்தொழிந்தமற்றீரெழுத்தும், வேறிரு மொழியாய் வேறிருபொருளைத்தர வரினது
வெதிர்ப்பதாதி யெனப்படும். (வ-று.) கவரி-கரி, வரி; கவலை-கலை, வலை; கமலம் -
கலம், மலம்; புவனம் - புனம், வனம்; பாசடை - பாடை, சடை; பூபதி - பூதி, பதி;
எ-ம். - வெண்பா. - "மூன்றெழுத்து மென்கோன் முதலீ றொருவள்ள, லீன்றுலகங்
காப்ப திடைகடை - யான் றுரைப்பிற், பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேற்றுங்,
காமாரி காரிமாரி." எ-ம். வெண்பா. - "கவரி கரிவரி சேர்ந்தார்த்துக் களிப்பத், தவமேத
வா வாழ மலையா - யுவமையைப்பின், வைத்தெரியை வானவழி யாமெனச் சேர்ந்தேன்.
கிந்தேரிதெரிக் கிரி." எ-ம். பிறவுமன்ன. அன்றியுஞ் சூத்திரத்துட் பிறவென்ற மிகையான்,
மிறைகவியென்றுஞ் சித்திரக்கவியென்று மொருவகைச்சமம் பற்றிய விருபதுவகைக்கவி
தண்டியலங்காரத்துட் காணப்படும். அவையாவன:- மேற்கூறிய மாத்திரைச் சுருக்கமுந்
திரிபதாதியுமன்றிக் கோமுத்திரியுங் கூடசதுக்கமு மாலைமாற்று மெழுத்துவ ருத்தனமு
நாகபந்தனமும் வினாவுத்தரமுங் காதைகாப்புங் கரந்துறைச் செய்யுளுஞ் சக்கரமுஞ்
சுழிகுளமுஞ் சருப்பதோப் பத்திரமு மக்கரச்சுத்தமு