முதலியபெயரும் இடக்காரணப் பெயர்களாம். பிரபவன், இபவன் என வருடத்தால்வருபெயரும்; வேனிலான், காரான், என பருவத்தால் வரு பெயரும்; தையான், மாசியான், என மாதத்தால் வருபெயரும்; ஆதிரை யான், ஓணத்தான், என நாளால்வருபெயரும்; நெருநலான், இற்றையான் முதலியபெயரும்; காலக்காரணப் பெயர்களாம். அலைகாதான், சுரிகுழலான், என உறுப்பால் வருபெயரும்; நெடுங்கையன், செங்கண்ணன் முதலிய பெயரும், சினைக்காரணப்பெயர்களாம். பெரியன், சிறியன், என அளவால்வருபெயரும்; அறிஞன், புலவன், என அறிவால்வருபெயரும்; அமுதனையான், விடமனையான், என ஒப்பால்வருபெயரும்; குறளன், கூனன் என வடிவால்வருபெயரும்; கரியன்,சிவப்பன், என நிறத்தால் வருபெயரும்; தேவன், மானுடன், என கதியால்வருபெயரும்; அந்தணன், அரசன், என சாதியால்வரு பெயரும்; சேரன், சோழன், என குடியால் வருபெயரும்; ஆசிரியன், படைத்தலைவன், என சிறப்பால்வருபெயரும்; நல்லன், தீயன், முதலியபெயரும் குணக்காரணப்பெயர்களாம். ஓதுவான், ஈவான், என ஓதலீதலால் வருபெயரும்; வாணிகன், தூதன் முதலியபெயரும்; தொழிற்காரணப்பெயர்களாம். வள்ளுவப்பயன், குயக்கல், தொல்காப்பியம் முதலிய கருத்தாகாரணப்பெயர். கமுகந்தோட்டம், காரைக்காடு முதலிய மிகுதிகாரணப்பெயர். எண்வகைக்காரணங்களால் காரணப்பெயர்வந்தவாறு காண்க. அன்றியும், பலகாரணங்களால் வரினும் வருமக்காரணங்காட்டாது ஒன்றன்பெயரை ஒன்றற்காக்கி வருவன ஆகுபெயரெனப்படும். (உ-ம்.) புழுக்கப்பட்டசோற்றை - புழுக்கல், எ-து. தொழிலாகுபெயர். புளியையுடையமரத்தினை - புளி, எ-து. சினையாகுபெயர்; கார்நிறத்தையுடைய மேகத்தை - கார், எ-து. குணவாகுபெயர்; பிறவாகுபெயர் 49-ஞ். சூத்திரத்திற்காண்க. அன்றியும் பலகாரணங்களால் வந்தனவாகக்காட்டினும் அவற்றின் பயனைக்கொள்ளாது, இடுகுறியால் அக்காரணங்களைக்குறியாது இதற்கிது பெயரெனக்குறித்து ஒருபொருளைத்தருவன இடுகுறிப்பெயரெ னப்படும். (உ-ம்.) கறுப்பன், எ-து. குணக்காரணப்பெயரும், அறுமுகன், எ-து. சினைக்காரணப்பெயரும், கூத்தன், எ-து. தொழிற்காரணப் பெயருமாயினும், இவைமுதலாயின இதற்கிதுபெயரெனக்குறித்து மக்கட்காயினும் விலங்குகட்காயினுஞ் சொல்லின் இடுகுறிப்பெயராம். இவையே தனித்துந் தொகுத்தும் வழங்கும். (உ-ம்.) கறுப்பன், கூத்தன் முதலியன தனித்திய லிடுகுறிப்பெயராம். படை, சேனை, நாடு, ஊர் முதலியன தொகுத்திய விடுகுறிப்பெயராம். இவ்விருவகையாரும் இடுகுறிப்பெயர். அன்றியும், (உ-ம்.) மரம், மலை, கடல், நிலம், யாறு, சோறு, என்பன இடுகுறிப்பொதுப்பெயர். விள, பலா, பனை, என்பன இடுகுறிச்சிறப்புப்பெயர். பறவை, அணி, என்பன காரணப்பொதுப்பெயர். அன்னம், மயில், முடி, என்பன காரணச் சிறப்புப்பெயர். முள்ளி, கறுப்பன், அந்தணன், என்பன காரணவிடுகுறிப் பெயர். முள்ளி, எ-து. முள்ளையுடையன வற்றையெல்லாம் உணர்த்துங்கால் காரணக்குறி, |
|
|