உவமையியல்
 
272. வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே-
வகை பெற வந்த உவமத் தோற்றம்.
உரை
   
273. விரவியும் வரூஉம் மரபின' என்ப உரை
   
274. உயர்ந்ததன் மேற்றே, உள்ளும் காலை. உரை
   
275. சிறப்பே, நலனே, காதல், வலியொடு
அந் நால் பண்பும் நிலைக்களம்' என்ப .
உரை
   
276. கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும் உரை
   
277. முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய
உரை
   
278. சுட்டிக் கூறா உவமமாயின்,
பொருள் எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே! .
உரை
   
279. உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் உரை
   
280. பொருளே உவமம் செய்தனர் மொழினும்
மருள் அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும்
உரை
   
281. பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய
உரை
   
282. அவைதாம்,
அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப,
என்ன, மான, என்றவை எனாஅ-
ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க ,
என்ற, வியப்ப, என்றவை எனாஅ-
எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப,
கள்ள, கடுப்ப, ஆங்கவை எனாஅ-
காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள,
மாற்ற, மறுப்ப, ஆங்கவை எனாஅ-
புல்ல, பொருவ, பொற்ப, போல,
வெல்ல, வீழ, ஆங்கவை எனாஅ-
நாட, நளிய, நடுங்க, நந்த,
ஓட, புரைய, என்றவை எனாஅ-
ஆறு-ஆறு அவையும், அன்ன பிறவும்,
கூறும் காலைப் பல் குறிப்பினவே .
உரை
   
283. அன்ன, ஆங்க, மான, இறப்ப,
என்ன, உறழ, தகைய, நோக்கொடு,
கண்ணிய எட்டும்-வினைப்பால் உவமம் .
உரை
   
284. அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும் உரை
   
285. எள்ள, விழைய, புல்ல, பொருவ,
கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ,
என்று ஆங்கு எட்டே-பயனிலை உவமம் .
உரை
   
286. கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய,
ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப, என்று
அப் பால் எட்டே-மெய்ப்பால் உவமம் .
உரை
   
287. போல, மறுப்ப, ஒப்ப, காய்த்த,
நேர, வியப்ப, நளிய, நந்த, என்று
ஒத்து வரு கிளவி-உருவின் உவமம் .
உரை
   
288. தம்தம் மரபின் தோன்றுமன் பொருளே உரை
   
289. நால்-இரண்டு ஆகும் பாலுமார் உண்டே உரை
   
290. பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்
வழி மருங்கு அறியத் தோன்றும்' என்ப
உரை
   
291. உவமப் பொருளின் உற்றது உணரும்
தெளி மருங்கு உளவே திறத்து இயலான
உரை
   
292. உவமப் பொருளை உணரும் காலை,
மரீஇய மரபின் வழக்கொடு வருமே .
உரை
   
293. இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே உரை
   
294. பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி,
முன்ன மரபின் கூறும் காலை,
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே .
உரை
   
295. உவமப் போலி ஐந்து' என மொழிப உரை
   
296. தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்,
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
பிறப்பினும் வரூஉம் திறத்த' என்ப .
உரை
   
297. கிழவி சொல்லின் அவள் அறி கிளவி உரை
   
298. தோழிக்கு ஆயின், நிலம் பெயர்ந்து உரையாது. உரை
   
299. கிழவோற்கு ஆயின், உரனொடு கிளக்கும். உரை
   
300. ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே உரை
   
301. இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும்
உவம மருங்கின் தோன்றும்' என்ப
உரை
   
302. கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே உரை
   
303. கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே உரை
   
304. தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
கூறுதற்கு உரியர், கொள் வழியான .
உரை
   
305. வேறுபட வந்த உவமத் தோற்றம்
கூறிய மருங்கின் கொள்வழிக் கொளாஅல்!
உரை
   
306. ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே உரை
   
307. உவமத் தன்மையும் உரித்து' என மொழிப-
'பயனிலை புரிந்த வழக்கத்தான'
உரை
   
308. தடுமாறு உவமம் கடி வரை இன்றே உரை
   
309. அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே;
நிரல் நிறுத்து அமைத்தல், நிரல்-நிறை, சுண்ணம்,
வரன் முறை வந்த மூன்று அலங்கடையே.
உரை