தொடக்கம் | ||
உவமையியல்
|
||
272. | வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே- வகை பெற வந்த உவமத் தோற்றம். |
உரை |
273. | விரவியும் வரூஉம் மரபின' என்ப | உரை |
274. | உயர்ந்ததன் மேற்றே, உள்ளும் காலை. | உரை |
275. | சிறப்பே, நலனே, காதல், வலியொடு அந் நால் பண்பும் நிலைக்களம்' என்ப . |
உரை |
276. | கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும் | உரை |
277. | முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும் நுதலிய மரபின் உரியவை உரிய |
உரை |
278. | சுட்டிக் கூறா உவமமாயின், பொருள் எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே! . |
உரை |
279. | உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் | உரை |
280. | பொருளே உவமம் செய்தனர் மொழினும் மருள் அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும் |
உரை |
281. | பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக் குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய |
உரை |
282. | அவைதாம், அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, என்றவை எனாஅ- ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க , என்ற, வியப்ப, என்றவை எனாஅ- எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, ஆங்கவை எனாஅ- காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, ஆங்கவை எனாஅ- புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, ஆங்கவை எனாஅ- நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய, என்றவை எனாஅ- ஆறு-ஆறு அவையும், அன்ன பிறவும், கூறும் காலைப் பல் குறிப்பினவே . |
உரை |
283. | அன்ன, ஆங்க, மான, இறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்கொடு, கண்ணிய எட்டும்-வினைப்பால் உவமம் . |
உரை |
284. | அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும் | உரை |
285. | எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ, என்று ஆங்கு எட்டே-பயனிலை உவமம் . |
உரை |
286. | கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப, என்று அப் பால் எட்டே-மெய்ப்பால் உவமம் . |
உரை |
287. | போல, மறுப்ப, ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த, என்று ஒத்து வரு கிளவி-உருவின் உவமம் . |
உரை |
288. | தம்தம் மரபின் தோன்றுமன் பொருளே | உரை |
289. | நால்-இரண்டு ஆகும் பாலுமார் உண்டே | உரை |
290. | பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன் வழி மருங்கு அறியத் தோன்றும்' என்ப |
உரை |
291. | உவமப் பொருளின் உற்றது உணரும் தெளி மருங்கு உளவே திறத்து இயலான |
உரை |
292. | உவமப் பொருளை உணரும் காலை, மரீஇய மரபின் வழக்கொடு வருமே . |
உரை |
293. | இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே | உரை |
294. | பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி, முன்ன மரபின் கூறும் காலை, துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே . |
உரை |
295. | உவமப் போலி ஐந்து' என மொழிப | உரை |
296. | தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின், வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் பிறப்பினும் வரூஉம் திறத்த' என்ப . |
உரை |
297. | கிழவி சொல்லின் அவள் அறி கிளவி | உரை |
298. | தோழிக்கு ஆயின், நிலம் பெயர்ந்து உரையாது. | உரை |
299. | கிழவோற்கு ஆயின், உரனொடு கிளக்கும். | உரை |
300. | ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே | உரை |
301. | இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும் உவம மருங்கின் தோன்றும்' என்ப |
உரை |
302. | கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே | உரை |
303. | கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே | உரை |
304. | தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற்கு உரியர், கொள் வழியான . |
உரை |
305. | வேறுபட வந்த உவமத் தோற்றம் கூறிய மருங்கின் கொள்வழிக் கொளாஅல்! |
உரை |
306. | ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே | உரை |
307. | உவமத் தன்மையும் உரித்து' என மொழிப- 'பயனிலை புரிந்த வழக்கத்தான' |
உரை |
308. | தடுமாறு உவமம் கடி வரை இன்றே | உரை |
309. | அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே; நிரல் நிறுத்து அமைத்தல், நிரல்-நிறை, சுண்ணம், வரன் முறை வந்த மூன்று அலங்கடையே. |
உரை |