| தொடக்கம் | ||
| மொழிமுதல் எழுத்துக்கள்
|
||
| 59. | பன்னீர்-உயிரும் மொழி முதல் ஆகும். | உரை |
| 60. | உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா. | உரை |
| 61. | க, த, ந, ப, ம, எனும் ஆவைந்து எழுத்தும் எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. |
உரை |
| 62. | சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே- அ, ஐ, ஒள, எனும் மூன்று அலங்கடையே. |
உரை |
| 63. | உ, ஊ, ஒ, ஓ, என்னும் நான்கு உயிர் `வ' என் எழுத்தொடு வருதல் இல்லை. |
உரை |
| 64. | ஆ, எ, ஒ, எனும் மூஉயிர் ஞகாரத்து உரிய | உரை |
| 65. | ஆவொடு அல்லது யகரம் முதலாது. | உரை |
| 66. | முதலா ஏன தம் பெயர் முதலும். | உரை |
| 67. | குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். |
உரை |
| 68. | முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது- அப் பெயர் மருங்கின் நிலையியலான. |
உரை |