| தொடக்கம் | ||
| தொகைச்சொல் வகைதொகை யாவன
|
||
| 410. | 'த, ந, நு, எ' எனும் அவை முதல் ஆகிய கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. |
உரை |
| 411. | `இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல், என்று அவை மூன்று' என்ப-`ஒரு சொல் அடுக்கே'. |
உரை |
| 412. | `வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே, வினையின் தொகையே, பண்பின் தொகையே, உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை, என்று அவ் ஆறு' என்ப,-`தொகைமொழி நிலையே'. |
உரை |
| 413. | அவற்றுள், வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல். |
உரை |
| 414. | உவமத் தொகையே உவம இயல். | உரை |
| 415. | வினையின் தொகுதி காலத்து இயலும். | உரை |
| 416. | வண்ணத்தின், வடிவின், அளவின், சுவையின், என்று அன்ன பிறவும் அதன் குணம் நுதலி, 'இன்னது இது' என வரூஉம் இயற்கை என்ன கிளவியும் பண்பின் தொகையே. |
உரை |
| 417. | இரு பெயர், பல பெயர், அளவின் பெயரே, எண்ணியற் பெயரே, நிறைப் பெயர்க் கிளவி, எண்ணின் பெயரொடு, அவ் அறு கிளவியும் கண்ணிய நிலைத்தே-உம்மைத் தொகையே. |
உரை |
| 418. | பண்பு தொக வரூஉம் கிளவியானும், உம்மை தொக்க பெயர்வயினானும், வேற்றுமை தொக்க பெயர்வயினானும், ஈற்று நின்று இயலும்-அன்மொழித்தொகையே. |
உரை |
| 419. | 'அவைதாம், முன் மொழி நிலையலும், பின் மொழி நிலையலும், இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும், அம் மொழி நிலையாது அல் மொழி நிலையலும், அந் நான்கு' என்ப-'பொருள் நிலை மரபே.' |
உரை |
| 420. | எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய. | உரை |
| 421. | 'உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொல் நடைத்து' என மொழிமனார் புலவர். |
உரை |
| 422. | வாரா மரபின வரக் கூறுதலும், என்னா மரபின எனக் கூறுதலும், அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயல்பான், 'இன்ன' என்னும் குறிப்புரை ஆகும். |
உரை |
| 423. | இசைப் படு பொருளே நான்கு வரம்பு ஆகும். | உரை |
| 424. | விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும். | உரை |
| 425. | 'கண்டீர் என்றா, கொண்டீர் என்றா, சென்றது என்றா, போயிற்று என்றா, அன்றி அனைத்தும், வினாவொடு சிவணி, நின்ற வழி அசைக்கும் கிளவி' என்ப. |
உரை |
| 426. | கேட்டை என்றா, நின்றை என்றா, காத்தை என்றா, கண்டை என்றா, அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி, முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே. |
உரை |