தொகைச்சொல் வகைதொகை யாவன
 
410. 'த, ந, நு, எ' எனும் அவை முதல் ஆகிய
கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா.
உரை
   
411. `இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல், என்று
அவை மூன்று' என்ப-`ஒரு சொல் அடுக்கே'.
உரை
   
412. `வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே,
வினையின் தொகையே, பண்பின் தொகையே,
உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை, என்று
அவ் ஆறு' என்ப,-`தொகைமொழி நிலையே'.
உரை
   
413. அவற்றுள்,
வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல்.
உரை
   
414. உவமத் தொகையே உவம இயல். உரை
   
415. வினையின் தொகுதி காலத்து இயலும். உரை
   
416. வண்ணத்தின், வடிவின், அளவின், சுவையின், என்று
அன்ன பிறவும் அதன் குணம் நுதலி,
'இன்னது இது' என வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே.
உரை
   
417. இரு பெயர், பல பெயர், அளவின் பெயரே,
எண்ணியற் பெயரே, நிறைப் பெயர்க் கிளவி,
எண்ணின் பெயரொடு, அவ் அறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே-உம்மைத் தொகையே.
உரை
   
418. பண்பு தொக வரூஉம் கிளவியானும்,
உம்மை தொக்க பெயர்வயினானும்,
வேற்றுமை தொக்க பெயர்வயினானும்,
ஈற்று நின்று இயலும்-அன்மொழித்தொகையே.
உரை
   
419. 'அவைதாம்,
முன் மொழி நிலையலும், பின் மொழி நிலையலும்,
இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்,
அம் மொழி நிலையாது அல் மொழி நிலையலும்,
அந் நான்கு' என்ப-'பொருள் நிலை மரபே.'
உரை
   
420. எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய. உரை
   
421. 'உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே
பலர்சொல் நடைத்து' என மொழிமனார் புலவர்.
உரை
   
422. வாரா மரபின வரக் கூறுதலும்,
என்னா மரபின எனக் கூறுதலும்,
அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயல்பான்,
'இன்ன' என்னும் குறிப்புரை ஆகும்.
உரை
   
423. இசைப் படு பொருளே நான்கு வரம்பு ஆகும். உரை
   
424. விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும். உரை
   
425. 'கண்டீர் என்றா, கொண்டீர் என்றா,
சென்றது என்றா, போயிற்று என்றா,
அன்றி அனைத்தும், வினாவொடு சிவணி,
நின்ற வழி அசைக்கும் கிளவி' என்ப.
உரை
   
426. கேட்டை என்றா, நின்றை என்றா,
காத்தை என்றா, கண்டை என்றா,
அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி,
முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே.
உரை