பக்கம் எண் :

கற்பியல் சூ.6125
 

பைஞ்சாய்ப் பாவை யீன்றனென் யானே”1  

(ஐங்குறு-155)
  

இது பெட்டது.
  

“நீரார் செறுவின்” என்னும் மருதக்கலியும் (75) அது.   இனிப்  பல்வேறு  நிலையாவன:  தோழி
பிரிவுணர்த்திய  வழிச்  செலவழுங்கக்  கூறுவனவற்றின் வேறுபாடுகளும், பிரிந்துழி வழியருமை பிறர் 
கூறக் கேட்டுக்  கூறுவனவும்,  தலைவனது செலவுக்  குறிப்பு அறிந்து தானே கூறுவனவும், தூதுவிடக்
கருதிக் கூறுவனவும், நெஞ்சினையும், பாணனையும் தூது விட்டுக் கூறுவனவும், வழியிடத்துப் புற்களை
நொந்து கூறுவனவும்,  பிரிவிடையாற்றாளெனக்  கவன்ற  தோழிக்கு  ஆற்றுவலெனக்  கூறுவனவும், 
அவன் வரவு தோழி  கூறிய  வழி  விரும்பிக்  கூறுவனவும்,  கூறிய  பருவத்தின்  வாராது பின்னர்
வந்தவனொடு கூடியிருந்து முன்னர்த் தன்னை வருத்திய குழலை  மாலையிற்  கேட்டுத்  தோழிக்குக் 
கூறுதலும்,  தலைவன் தவறிலனெனக் கூறுவனவும், புதல்வனை  நீங்காதொழுகிய  தலைவன்  நீங்கிய
வழிக்  கூறுவனவும்,  காமஞ் சாலாவிளமை  யோளைக்  களவின்  கண் மணந்தமை அறிந்தேனெனக்
கூறுவனவும், இவற்றின் வேறுபட வருவன பிறவுமாம்.
  

“அருளுமன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோருரவோராயி
னுரவோருரவோராக
மடவமாக மடந்தை நாமே”
2
  

(குறுந்-20)
  

இது செலவழுங்கக் கூறியது.
  

“வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்றலார்க்கு
  


1. பொருள் : தோழீ! வெள்ளாங்குருகின் குஞ்சினைத் தன்குஞ்சு எனக் கருதி அதைப் பார்க்கச் 
சென்ற நாரையானது ன்  சிறகால்  சிலிர்த்து  அசைய  அதனால்  உதிர்ந்த  நெய்தற்பூக்கள்
கழியிடத்து  நீரலைகளுடன்  ஓடும்படியான  துறைவனுக்கு  யான்  களவு ஒழுக்கக் காலத்தில்
பஞ்சாய்க்  கோரையாற் செய்த  பாவையையீன்றேன்.  அதனால் பரத்தமை கொண்ட அவரை
மகப்பேற்றுக்காக ஏற்றுக் கோடல் வேண்டுவதில்லை.
  

2. பொருள் : தோழீ  அருளும் அன்பும் நீங்கித் தம் துணைவியைப் பிரிந்து பொருள் தேடப் 
பிரிவோர் அறிவுடையராயின் அறிவுடையோர் அறிவுடையோராகவே  ஆகுக.  பிரிவாற்றாது
வருந்தும்  நாம் அறியாமையுடையோம்.