பக்கம் எண் :

கற்பியல் சூ.6127
 

வின்னாவரும்பட ரெம்வயிற் செய்த
பொய்வலாளர் போலக்

கைவல் பாணவெம்மறவாதீமே”
1
  

(ஐங்குறு-473)
 

இது தூதுவிடக் கருதிக் கூறியது.
  

“சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதறவெந்த பாலைவெங்காட்
டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச்

சென்ற நெஞ்ச மீட்டிய பொருளே”
2
  

(ஐங்குறு-317)
  

இது நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது.
  

“மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்
செய்யரண் சிதைத்த செருமிகுதானையொடு
கதழ்பரி நெடுந்தேரதர் படக்கடைஇச்
சென்றவர்த் தருகுவலென்னு

நன்றாலம்ம பாணனதறிவே”
3
  

(ஐங்குறு-474)
 

இதுபாணனைத் தூதுவிட்டுக் கூறியது.
  

“புல்வீழிற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி யருவியிற்றோன்று நாடன்
றீதினெஞ்சத்துக் கிளவி நம்வயின்
நயந்தன்று வாழிதோழி நாமு
  


1. பொருள் : இசையிற் கைவல்வ பாணனே! பலரும் புகழும் சிறப்புடைய குரிசிலாகிய தலைவரை
நினைத்து  அவர்  சென்ற  நாட்டிற்குச் செல்ல விரும்பினாயாயின் இனியதல்லாத அரியதுயரை 
எம்மிடம் செய்து பொய்யில் வல்லவர் மறந்தமைபோல நீ எம்மை மறவாதே.
  

2. பொருள் : தோழீ! பாழ்பட்டுப் பசுமை  நீங்கி வெந்த பாலையாகிய கொடிய காட்டுச் சுரவழியில்
நம்மைப் பிரிந்து சென்ற தலைவரிடத்துச் சென்ற நம் நெஞ்சம் மீளாது நீண்டகாலம் அங்கிருத்தற்
காரணம் யாதென ஆராய்வோம் வருக.
  

3. பொருள் : தோழீ!  இப்பாணனானவன்,  பகைவர்  கொண்ட  அரண்களைச் சிதைத்த போரில் 
மிக்க சேனைகளுடன்   தன்   பரித்தேரை   வழிகெடச்  செலுத்திச்  சென்ற  நம்  தலைவரை
நம் நுதல் விளக்கமுறும்படி அழைத்து வருவேன் என்று கூறும் அவன் அறிவு மிக நன்று.