பக்கம் எண் :

134தொல்காப்பியம் - உரைவளம்
 

பொன்புரை நரம்பினின் குரற்சீறியா
ழெழாஅல்வல்லை யாயினுந் தொழாஅல்
புரையோரன்ன புரையுநட்பி
னிளையோர் கூம்புகை மருள்வோராங்கு
கொண்டுசெல் பாணநின் றண்டுறையூரனைப்
பாடுமனைப் பாடல்கூடாது நீடுநிலைப்
புரவியும் பண்ணிலைமுனிகுவ
விரகில மொழியல்யாம் வேட்டதில்வழியே”
1

(நற்-380)
   

இது பாணனுக்கு வாயின் மறுத்தது.
  

“புல்லேன் மகிழ்ந புலத்தலுமிலனே
கல்லாயானைக் கடுந்தேர்ச் செழியன்
படைமாண் பெருங்குள மடைநீர்விட்டெனக்
காலணைந்தெதிரியகனைக் கோட்டுவாளை
யள்ளலங்கழனி யுள்வாயோடிப்
பகடுசேறுதைத்த புள்ளி வெண்புறத்துச்
செஞ்சாலுழவர் கோற்புடைமதரிப்
பைங்காற்செறுவினணை முதற்பிறழும்
வாணன் சிறுகுடியன்னவென்
கோனே ரெல்வளை நெகிழ்த்த நும்மே”
2

(நற்றிணை-340)
  

இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித்தலைவி கூறியது.
  

“வெள்ளாங்குருகின் பிள்ளைசெத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலையிருந்து மாலைச்சேக்குந்
தண்கடற் சேர்ப்பனொடு வாரான்
றான்வந் தனனெங் காதலோனே”
3

(ஐங்குறு-157)
   

இது  வாயில்  வேண்டி  ஒழுகுகின்றான்  புதல்வன்  வாயிலாக  வருமெனக்  கேட்டு  அஞ்சிய தலைவி
அவன் விளையாடித் தனித்து


1. பொருள்: பக்கம் 100ல் காண்க

2. பொருள்: பக்கம் 100ல் காண்க

3. பொருள:  வெள்ளாங்குருகின்  குஞ்சைத்  தன்  குஞ்சு  எனக்  கருதிப்  பார்க்கச்  சென்ற  நாரை
காலையிலிருந்து மாலைவரை அங்கேயே தங்கும்படியான கடற்சேர்ப்பனொடு வாரானாய் தான் மட்டும்
தனியே வந்தான் என் மகன். என்னே இது!