பக்கம் எண் :

கற்பியல் சூ.547
 

எனத்தான்  பராய  தெய்வத்தினைத் தோழி கற்புக் காலத்துப் பரவுக் கடன் கொடுத்தற்கு ஏத்திய வழித்
தலைவனும் ஏத்துதலாம்.
  

உதாரணம்
  

“அதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த
பஃறேனிறாஅ லல்கு நர்க்குதவு
நுந்தை நன்னாட்டு வெந்திறன் முருகென
நின்னோய்க்கியற்றிய வெறி நின்றோழி
யென்வயி நினோக்கலிற்போலும் பன்னாள்
வருந்திய வருத்தந் தீரநின்
றிருந்திழைப் பணைத்தோள் புணரவந்ததுவே”
1

  

தேன்   இறாலை   அல்குநர்க்கு  உதவும்  நாடாதலின்  நின்  நோய்க்கு  இயற்றிய  வெறி  நுமக்குப்
பயன்பாடது எமக்குப் பயன்றரு மென்றோன்
2 என்வயின் நோக்கலின் என்றது.
  

எனக்குப்  பயன் கொடுக்க  வேண்டுமென்று பராவுதலிற்றோளைப் புணர்ந்து உவந்தது என்றான். இது
கற்புக் காலத்துப் பரவுக்கடன் கொடுக்கின்ற காலத்துத் தலைவன் கூறியது.
  

அல்லல்  தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும்-வரைந்த காலத்து மூன்று நாட்
கூட்டமின்மைக்குக்  காரணமென்னென்று  தலைவி  மனத்து  நிகழா  நின்ற  வருத்தந்  தீரும்படி மிக்க
வேட்கையோடு  கூடியிருந்து வேதஞ் சொல்லுதலுற்ற பொருளின் கண்ணும்; தலைவன் விரித்து விளங்கக்
கூறும்.
3
  

அது    முதனாள்  தண்  கதிர்ச்  செல்வற்கும்  இடைநாள்  கந்தருவர்க்கும்,   பின்னாள்  அங்கியங்
கடவுட்கும் அளித்து நான்காநாள் அங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப  யான்  நுகர வேண்டிற்று.
அங்ஙனம் வேதங் கூறுதலால் எனத் தலைவிக்கு விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று.


1. பொருள்: பக்கம் 23ல் காண்க.
  

2. என்றான் என்றிருத்தல் வேண்டும்.
  

3. இவ்வுரையும் விளக்கமும் ஆரியர்கேற்பன.  தமிழ் மரபுக்கு  ஏலா.  இளம்பூரணர் உரையே கொள்க.
ஆரியச் சார்பாக உள்ளவிடங்களிலும் தமிழ் மரபுக்கேற்பக் கொள்க.