1. பொருள்: பக்கம் 122ல் காண்க. * பிழைத்து....கொடுத்தற் கண்ணும்-பரத்தையிற் பிரிதலாகிய பிழையைச் செய்து வந்திருந்த தலைவனையடைந்து தலைவியை அளிக்குமாறு கூறித் தலைமகளை அவனிடத்து உரிமையாக்கிக் கொடுக்குமிடத்தும். 2. பொருள்: ஞாயிறு போலும் ஒளிக்கதிருடைய வேள்வித்தீயும் ஆம்பல் மலரும் வயலும் உடைய தேனூர் போலும் இவள் அழகு தனிமையடைந்து வருந்த நீ பிரியும்படியான அத்தகைய அழகையும் உடையளாவளோ நின் பெண்டு. 3. பொருள்: மகிழ்ந! கேள். வாழி. களவுக் காலத்து ஏற்பட்ட இடையீடுகளால் நீ ஆற்றாயாய் இருந்த |