பக்கம் எண் :

கற்பியல் சூ.9159
 

இதனை இவளே ஆற்றுவதன்றி யான் ஆற்றுவிக்குமாறென்னை என்றாளென்க.
  

அற்றம் அழிவு உரைப்பினும்-களவுக் காலத்துப்பட்ட வருத்தம் நீங்கினமை கூறினார்.
  

“எக்கர் ஞாழலிகந்துபடு பெருஞ்சினை
வீயினிது கமழுந்துறைவனை
நீயினிது முயங்குமதி காதலோயே”

(ஐங்குறு-148)
  

“எரிமருள் வேங்கையிருந்த தோகை
யிழையணி மடந்தையிற்றோன்று நாட
வினிது செய்தனையானுந்தை வாழியர்
நன்மனை வதுவை யயரவிவள்
பின்னிருங் கூந்தன் மலரணிந்தோயே”
1

(ஐங்குறு-264)
  

அற்றம்  இல்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத
தலைவியைத்   தலைவன்   வரைந்து  கோடல்  குறித்துப்  பரவிய  தெய்வம்    அதனை  முடித்தலின்
அப்பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறும் இடத்தும்.
  

உதாரணம்:
  

“நெஞ்சொடு மொழிகடுத் தஞ்சுவரநோக்குந்
தாயவட்டெறுவது தீர்க்கவெம் மகனெச்
சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற
மறைந்து நின்றிறைஞ்சினம் பலவே
பெற்றனம் யாமே மற்றதன் பயனே”
2
 

“கிழவோற் சுட்டிய தெய்வக் கடம்’ என்று பாடம் ஓதி
  

“வாழியாதன் வாழியவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
வெனவேட்டோளோ யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை யூரன் வரைக
வெந்தையுங் கொடுக்க வெனவேட்டேமே”
3

(ஐங்குறு-6)


1. பொருள்: பக்கம் 143ல் காண்க.
2. பொருள்: பக்கம் 143ல் காண்க.
3. பொருள்: பக்கம் 144ல் காண்க.