பக்கம் எண் :

கற்பியல் சூ.40271
 

தலைவன் தற்புகழ்ச்சி
  

179.

கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய என்ப. 

(40)
 

இளம்.
  

இது, தலைவற்குரியதோர் மரபுணர்த்திற்று.
  

இ-ள்  :  தலைவி  முன்னர்த்  தலைவன்  றன்னைப்  புகழுங்கூற்று,  வினைவயிற்  பிரியும்  வழியுரிய
என்றவாறு.
  

“இல்லென இரந்தோர்க் கொன்றீயாமை இழிவு”  

(கலித்-2)
 

என்றும்
  

“இல்லிருந்து மகிவோர்க் கில்லையால் புகழ்” 
  

என்று கூறுதல். இவ்வாறு கூறலே ‘யான் செய்யேன்’1
  

எனத் தன்னைப் புகழ்ந்தவாறாம்.
  

நச்.
  

இது, தலைவன் தன்னைப் புகழ்ந்துரைக்கும் இடம் இன்னுழி என்கின்றது.
  

இ-ள்:  கிழவி முன்னர்க்  கிழவோன் தற்புகழ் கிளவி-தலைவி முன்னர்த் தலைவன்  தன்னைப் புகழ்ந்து
கூறுங்கூற்று,  வினைவயின் உரிய  என்ப-காரியங்களை நிகழ்த்துங்காரணத்திடத்து  உரியவென்று  கூறுவார்
ஆசிரியர் என்றவாறு.
  

அக்காரணமாவன     :  கல்வியும்,  கொடையும்,  பொருள்   செயலும்  முற்றகப்பட்டோனை  முற்று
விடுத்தலுமாகிய   காரியங்களை   நிகழ்த்துவலெனக்   கூறுவன.    இவ்வாள்வினைச்   சிறப்பை   யான்
எய்துவலெனத் தன்னைப் புகழவே அது பற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று.
  

“இல்லென விரந்தோர்க் கொன்றீயாமையிளிவென”  

(கலி-2)


விரும்பத்தக்க சிறப்பினையுடைய பெண் இயல்பினல் என்றாலும் என்னொடு ஒப்பாவாள் அல்லள். 
  

1 ஈயாமையைச் செய்யேன், இல்லிருந்து வீணே மகிழ்தலைச் செய்யேன்.