செலவழுங்கல் |
183. | செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும். | (44) |
|
பி.இ.நூ. |
நம்பியகம் 88 |
தலைவி தன்னையும் தன்மனம் தன்னையும் அலமரல் ஒழித்தற்கு அழுங்குவ தல்லது செல்வத் தோன்றல் செல்லான் அல்லன். |
இல.வி.456 |
நம்பியகச் சூத்திரமே. |
இளம் |
இதுவுமது. |
இ-ள் : தலைவன் போகக் கருதித் தவிர்தல் போகாமை1யன்று, தலைவியை வற்புறுத்தலைக் குறித்துத் தவிர்ந்த தவிர்ச்சியாம் என்றவாறு. |
எனவே வினைமேற் செல்லுங் காலத்துத் தலைவி பொறாள் எனப் போகாமை இல்லை, வற்புறுத்திப்போம் என்ற வாறாம். |
நச் |
இது செலவழுங்கலும் பாலையாமென்கின்றது : |
இதன் பொருள்:- செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே-தலைவன் கருதிய போக்கினை இடையிலே தவிர்ந்திருத்தல் பிரிந்துபோதல் ஆற்றாமைக்கன்று, வன்புறை குறித்தல் தவிர்ச்சி ஆகும். தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சியாகும் என்றவாறு. |
“மணியுரு விழந்த வணியிழை தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே யொண்டொடி யுழையே மாகவு மினைவோள் பிழையலண் மாதோ பிரிதுநா மெனினே”2 |
(அகம்-5) |
1 போகாமையன்று-போகாமைக்கு அன்று. |
2 பொருள் : அணியிழையுடையளாகிய தலைவியின் மணிபோலும் நிறமுடைய உடம்பின் பொலிவிழப்பைக் |