பக்கம் எண் :

284தொல்காப்பியம் - உரைவளம்
 

‘இறவாது’     என்பதை   இரண்டிடத்துங்   கூட்டுக.  மூன்று  பதமாவன:  அதுவென்றும்  நீயென்றும்
ஆனாயென்றுங்கூறும்   பதங்களாம்.    அவை    பரமுஞ்சீவனும்    அவ்விரண்டும்   ஒன்றாதலுமாதலின்
இம்மூன்று  பதத்தின்  கண்ணே  தத்துவங்களைக்   கடந்த   பொருளை  உணர்த்தும் ஆகமங்களெல்லாம்
விரியுமாறு   உணர்ந்து  கொள்க.  இது  மூன்று   வருணத்தார்க்குங்   கூறினார்.   ஏனைய  வேளாளரும்
ஆகமங்களானும்  அப்  பொருளைக் கூறிய  தமிழானும்  உணர்தல்  ‘உயர்ந்தோர்குரிய’  (31) என்பதனான்
உணர்க. இஃது இல்லறம் நிகழ்த்தினார் துறவறம் நிகழ்த்துங்  கருத்தினராக  வேண்டுதலின்  காலவறையறை
கூறாராயினர். முன்னர்க் காட்டிய ‘அரம் போழல்வளை’ (அகம்-125) என்னும் பாட்டினுட்
  

“பானாட் கங்குலின் முனிய வலைத்தி
கடவுளர் சான்ற செய்வினை மருங்கிற்
சென்றோர் வலவரி னோடுவை”
   

என்றது, இராப்பொழுது அகலாது நீட்டித்ததற்கு ஆற்றாளாய்க் கூறினாளென்று உணர்க.
  

துணைவயிற் பிரிவுக்காலம்
  

187.

வேந்துறு தொழிலே யாண்டினது அகமே.(48)  
 

பி.இ.நூ.
  

இறை.கள. 41
  

பிரிவின் நீட்டம் நிலம்பெயர்ந் துறைவோர்க்கு
உரிய தன்றே யாண்டுவரை யிறத்தல்.
   

இல.வி. 458
  

தூதிற் பிரிவும் துணைவயிற் பிரிவும்
பொருள்வயிற் பிரிவும் ஓர்யாண் டுடைய.  


வதேயன்றி    துறவறத்துக்குரிய கல்விப்  பிரிவு கூறுதல் பொருந்தாது. தத், த்வம்,  அசி  (தத்துவமசி)
எனும்  மூன்று பதங்களின்  பொருளுணர்ந்தவன்  அது  கொண்டு வீடுபேற்றுக்கு முயல்வன் ஆதலின்
இல்லறவொழுக்கத்திற்பிரியும் பிரிவுபற்றிக் கூறுமிடத்து அத்துறவு பற்றிக் கூறுதல் ஏற்புடையதாகாது-சிவ,