பக்கம் எண் :

224தொல்காப்பியம் - உரைவளம்
 

புலந்தழப் புல்லாது விடுவா
யிலங்கு நீர்ச்சேர்ப்ப கொடியை காணீ
இன்மணிச் சிலம்பிற் சின்மொழியைம்பால்
மின்னொடு கெழீஇய தடவர வல்குல்
நுண்வரி வாடவாராது விடுவாய்
தண்ணந் துறைவ தகாஅய் காண்நீ
எனவாங், கனையளென்றளிமதி பெருமநின்னின்
றிறைவரை நில்லா வளையளிவட்கினிப்
பிறையேர் சுடர்நுதற் பசலை

மறையச்செல்லுநீ மணந்தனைவிடினே”
1

(கலி - 125)
 

என்னும் நெய்தற் கலி கைகோள் இரண்டிற்குங் கொள்க.


1 பொருள் : செல்வ (தலைவ!)   உலகத்தில்  அறிவிலாதார்   தாம் செய்யும் தீவினைகளைக் கண்டவர்
இல்லை என்று எண்ணிச் செய்யும் தீவினைகளுள் தம் நெஞ்சறிந்த வினைகளை மறைப்பினும் அவர்தம்
நெஞ்சமே  சான்றாகும்;  வேறு  சான்றில்லையாதலின்  நின்னை யான் கழறியுரைக்க வேண்டுவதில்லை.
ஆயினும் அன்பில்லாதவன், கொடியன் என்று கழறுவேன்; கேள்.

தேமொழியின் இளமுலைகள் தோன்றா முன்பருவத்தில்  அவளைக்  கூடிய  கூட்டத்தை  அவளின்
கண்கள் பனிவார்ந்து துளிக்கவும் கைவிடுவாய் நீ. அதனால் நீ கொடியை.

ஒளிவளையணிந்தவள் தழையுடையுடுத்திய பருவத்தில் அவளுடன் கூடிய தொடர்பை அவள் உடம்பு மெலிந்து தனித்து அழவும் கைவிடுவாய் ஆனாய்; நீ கொடியை.

சிலம்பும் சில மொழியும் உடைய  தலைவியைக்  கூந்தலைப் பின்னிவிடும் பருவத்தில் வந்து கூடிய
உறவு நீட்டித்து வரவும் அவள் அல்குலில் நுண்ணிய வரிவாடுமாறு கைவிடுவாய்; நீ கொடியை.

தலைவ!  அத்தகைய  வருத்தம் உடையவள்  அவள்  என்று  எண்ணி  அவட்கு  அருள்  செய்க
நீயில்லையாயின்  முன்கை  வளையல் நில்லாது விழும்படியாகும். அவளது நுதலின் பசலை மறையும் நீ
அவளை மணம் செய்து கொள்ளின். அறிக.