திலே, சிறந்தது ஏமஞ்சான்ற பயிற்றல்-அறம் பொருளின்பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப்படுத்துதல், இறந்ததன் பயனே-யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் என்றவாறு.* |
‘சான்ற காமம்’ என்றார் நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. இது கடையாயினார் நிற்கும் நிலையென்று உரைத்தற்குக் ‘கடை’ என்றார். ஏமஞ் சான்றவாவன; வானப்பிரத்தமுஞ் சந்நியாசமும்; எனவே, இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே நின்று பின்னர் மெய்யுணர்ந்து வீடு பெறுப என்றார். இவ்வீடு பேற்றினை இன்றியமையாது இவ்வில்லறமென்பது இதன் பயன். இது காஞ்சியாகாதோவெனின் ஆகாது [தங்குறிப்பினானன்றி நிலையாமை தானே வருவது தான் சிறந்து நிலைபெற்று நிற்குமெனச் சான்றோர் கூறுதலும் அது தானே வந்து நிற்றலுங் காஞ்சி. இஃது அன்னதன்றிச் சிறந்த வீட்டின்ப வேட்கையால் தாமே எல்லாவற்றையும் பற்றுறத்துறத்தலின் அகப் பொருட் பகுதியாம்]. இதனானே இவ்வோத்தினுட் பல வழியுங் கூறிய காமம் நிலையின்மையின்மேல் இன்பத்தை விளைத்தே வருதலிற் காஞ்சியாகாமை யுணர்க. |
உதாரணம் |
“அரும்பெறற் கற்பினயிராணியன்ன பெரும்பெயர்ப் பெண்டிரெனினும்-விரும்பிப் பெறுநசையாற் பின்னிற் பாரின்மையே பேணு நறுநுத லாணன்மைத் துணை1.” |
(நாலடி-381) |
இதனுள், அருந்ததியைப் போலுந் (?) தமக்குப் பெரும் பொருள்களை நச்சுதலாலே இரப்பாரது வறுமையே விரும்பிப் |
உண்டு சென்றான் என்பது ‘சென்றான் உண்டு’ என எச்சம் மாறும். உண்ட சோறு என்பது ‘சோறு உண்ட’ எனப் பெயரெச்சம் மாறாது. |
* நச்சினார்க்கினியரின் இவ்வுரையும் விளக்கமும் வலிந்து கொள்ளப்பட்டன. |
1 பொருள் : பெறுதற்கரிய கற்பினையுடைய இந்திராணி போலும் பெரிய புகழுடைய பெண்டிராய்இருந்தாலும் அவருள், பொருளைப் பெறும் பெருவிருப்பத்தால் தன்னை இரந்து பின்னிற்பவரின் வறுமையை விரும்பிக் காக்கும் (போக்கும்) நன்னுதலாளே கணவன் அடையும் நல்லதற்குத் துணையாவாள். |