முடிப்பினல்லது; அதனால் இக் குறை இன்றியமையாமை நோக்கிக்
குறைமுடிப்பனெனப் பொய்த்து ஒழுகினேன்; ஒழுக, நெருநலை நாளால் இக்
கானலுள் வந்து என்னை எதிர்ப்பட்டுத் தன் துணைப் புறந்தருவதோர்
அலவனைக் கண்டு, ‘‘இதுவாகாதே அறிவும் ஆண்மையுமாவது!” என,
அதனை நன்குமதித்து ஆற்றானாய் என்னையும் நோக்கி அலவனையும்
நோக்கி, ‘உணர்வினை என்கண்ணும் அவ்வலவன் கண்ணும்
ஒழியப்போயினான், எத்தன்மைய னாயினான் கொல்லோ! இன்று வந்திலன்’
என்னும்; அதற்குச் செய்யுள்:
‘பாடுஞ் சிறைவண் டறைபொழிற் பாழிப்பற்
றாவரசர்
ஓடுந் திறங்கண்ட கோன்கன்னிக் கானல் உறுதுணையோடு
ஆடும் அலவற் புகழ்ந்தென்னை நோக்கி அறிவழிய
நீடு நினைந்துசென் றான்நென்னல் ஆங்கொர் நெடுந்தகையே.’
(96)
‘பொன்றா விரிபுகழ் வானவன் பூலந்தைப்
பூவழிய
வென்றான் வியன்கன்னி அன்னந்தன் மென்படை மெய்யளிப்ப
நன்றாம் இதன்செய்கை என்றென்னை நோக்கி நயந்துருகிச்
சென்றார் ஒருவர்பின் வந்தறி யாரிச் செழும்புனத்தே.’
(97)
‘புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி
இணர்கைதைப் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்புரி ஐம்பாலாய் வண்ணம் உணரேனால்.’
(சிலப்பதிகாரம், கானல்வரி - 31)
‘ஒருநாள்
வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலுழுமென் நெஞ்சே.’
(குறுந்-176)
இது கேட்டு இறந்துபடாதது எற்றிற்கோ எனின், இறந்து படாளன்றே,
‘இவன் உளனாயினும் இறந்துபடும்பிற, யான் இறந்துபடின்’
என்றதனான். (10)
|