பக்கம் எண் :

வரியினையுடைய சுரும்பினம் பண்ணின்நலத்தைப் பாடித் திரண்டு அனுபவிக்கும் குளிர்ந்த பூவினையுடையதிருப்பாசூர், என்னுடைய மனத்தின் அழகைச்சிறிதும் ஒழியாமல் நுகர்ந்தவனுடைய பதி

(49)

238. 1குழவிக்கட்டோன்றிய காமப்பகுதி

இளமைந்தர் நலம்வேட்ட
வளமங்கையர் வகையுரைத்தன்று.

(இ - ள்.) குழவிப்பதத்தராகிய மைந்தரது நலத்தை விரும்பின காமப்பகுதி நிறைந்த மங்கையரதுதன்மையைச் சொல்லியது. எ-று.

(வ - று.)2வரிப்பந்து கொண்டொளித்தாய்வாள்வேந்தன்
அரிக்கண்ணி யஞ்சி யலற -எரிக்கதிர்வேற் [மைந்தா
செங்கோல னுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும்
எங்கோலந் தீண்ட லினி.

(இ - ள்.) அழகிய கந்துகத்தைக் கைப்பற்றிக்கரந்தாய், வாள் வேந்தன் மைந்தனே, செவ்வரிகருவரி பரந்த கண்ணினையுடையாள் பயப்பட்டு அழ;நெருப்புப்போன்ற ஒளிவேலினையும் செவ்விய கோலினையுமுடைய நும்முடைய சாமி கோபத்தினையுடையயானையின் மேலே தந்து தோன்றினும், எமது அணியினைத்தீண்டாதே கொள், இப்பொழுது.

(50)

239. ஊரின்கட் டோன்றியகாமப்பகுதி

நீங்காக் காதன் மைந்தரு மகளிரும்
பாங்குறக் கூடும் பதியுரைத் தன்று.

(இ - ள்.) ஒழியாத அன்பினையுடைய ஆடவரும்மகளிரும் அழகு பொருந்தக் கூடும் பதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)3ஊடிய வூட லகல வுளநெகிழ்ந்து
வாடிய மென்றோள் வளையொலிப்பக் -கூடியபின்
யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉம்
ஏமநீர்க் கச்சியெம் மூர்.

(இ - ள்.) வழக்காடிய, வழக்காட்டுப்போக மனநெகிழ்ந்து வாட்ட முற்ற மெல்லியதோளில் தொடிஆர்ப்பப் புணர்ந்த பின்பு இரவுப் பொழுது நீட்டிப்பதாகவெனச்சொல்லி யாழிசைபோலும் சொல்லினை யுடையார்கைகூப்பும் காவலுடைத்தாய்ப் புனலாற்சிறந்தகாஞ்சி, எங்கள் பதி. எ-று.

ஆக வென்பது ஆகெனக் குறைந்து நின்றது.

(51)

பாடாண் திணைப்பாட்டு ஒன்றும் , துறைப்பாட்டுஐம்பதும் முடிந்தன.

ஒன்பதாவது பாடாண்படலம் முற்றிற்று.


1. பரி 10: 107: கலி 51; திருவாய். 6.2: "மின்னிடை "; திருவேங்கடத். 97. 2. தொல். புறத். சூ 24. இளம். மேற்; வரிப்பந்து; முருகு. 68; நற் 305: 1; கலி. 51: 3. 3. பு.வெ. 317.