(இ - ள்.) கையிடத்தே விளங்கும் வேலினையுடையவன் செலுத்த வேட்கையைச் செறிந்த தொடியாற் சிறந்த தோளினையுடையாள் தலைவன் முன்னே சொல்லியது எ-று. வ - று. எழுதெழின் மார்ப மெனக்குரித் தாகென் றழுதழுது வைகலு மாற்றேன் - தொழுதிரப்பல் வல்லிய மன்ன வயவேலோய் வாழ்கென அல்லியந்தார் நல்க லறம். (இ - ள்.) சந்தன குங்குமச் சேற்றால் வரிக்கும் அழகினையுடைய அகலம் எனக்கே சேமமாக வேண்டுமென்று சொல்லி அழுதழுது நாடோறும் பொறேனாகிப் பணிந்து வேண்டிக்கொள்வேன்; புலியையொத்த வலிய வெற்றிவேலினையுடையோய், உயிர் வாழ்வாயாகவென எனக்கு நின் அல்லியினையுடைய மாலையைத் தருதல்காண் அறமாவது எ-று. (1) 307. பின்னிலை முயறல் முன்னிழந்த நலனசைஇப் பின்னிலை 3மலைந்தன்று. (இ - ள்.) தலைவி முன்பு தோற்ற தன் அழகை நச்சி இரந்து பின்னிற்றலை மேற்கொண்டது எ-று. வ - று. மற்கொண்ட திண்டோண் மறவேனெடுந்தகை தற்கண்டு 1மாமைத் தகையிழந்த - எற்காணப் பெய்களி யானைப் பிணரெருத்திற் 2கண்டியான் கைதொழுதேன் றான்கண் டிலன். (இ - ள்.) மற்றொழிலை மேற்கொண்ட திண்ணிய புயத்தினையும் சினவேலினையுமுடைய பெரிய மேம்பாட்டாளன் தன்னைக்கண்டு நிறத்தின் அழகையிழந்த என்னைக்காணச் சொரியும் மதத்தினையுடைய களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே கண்டு யான்கையைக் குவித்தேன்; தான் என்னைக் கண்டிலன் எ-று. (2) 308. பிரிவிடை யாற்றல் இறைவளை நெகிழ வின்னா திரங்கிப் பிறைநுதன் மடந்தை பிரிவிடை யாற்றின்று. (இ - ள்.) முன்கையில் தொடி சோர வெறுத்து வருந்தி இளமதி போன்ற நுதலினையுடைய மடவாள்தலைமகன் பிரிந்தவிடத்து ஆற்றியது எ-று. வ - று. ஓடுக கோல்வளையு மூரு மலரறைக தோடவிழ் தாழை துறைகமழக் - கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் புலம்புகொண் மான்மாலை நீங்கானென் னெஞ்சகத்து ணின்று.
1. மாமை இழத்தல்: குறுந். 27. 4-5. 2. பு. வெ. 294: 3-4. (பி-ம்)3. 'மலிந்தன்று'. |